ஜன்னல் மீது ஏறி பயணம் செய்த மாணவர்கள் - பொதுமக்கள் அச்சம்..!

 


ராணிப்பேட்டை மாவட்டம் அருகே அரசு பேருந்தின் ஜன்னல் மீது நின்றவாறு மாணவர்கள் ஆபத்தான வகையில் பயணம் மேற்கொண்ட வீடியோ காட்சிகள் காண்போரை பதைபதைக்க செய்கிறது. 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே ஆற்காட்டிலிருந்து வேலூர் செல்லும் அரசு பேருந்தின் ஜன்னல் மீது நின்றவாறு மாணவர்கள் சிலர் ஆபத்தான முறையில் பயணிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஆற்காட்டிலிருந்து வேலூர் வழித்தடத்தில் நாள்தோறும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் இந்த வழித்தடத்தில் அதிக அளவில் சென்று வருகின்றனர்.

இது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு