Posts

மது அருந்தியதாக ப்ரீத் அனலைசர் காட்டிய விவகாரம்: காவல்துறை விளக்கம்

Image
  சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவர் ராயப்பேட்டை பகுதிக்கு வேலை விஷயமாக சென்று விட்டு எல்டாம்ஸ் சாலை வழியாக சாலிகிராமம் நோக்கி தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த தேனாம்பேட்டை சட்டம் - ஒழுங்கு காவலர்களான இளங்கோவன் உள்ளிட்டோர் தீபக்கின் வாகனத்தை மடக்கியுள்ளனர். அவர் மது அருந்தியுள்ளாரா என ப்ரீத் அனலைசர் இயந்திரத்தைக் கொண்டு சோதனை செய்தனர். அப்போது தீபக் மது அருந்தியிருப்பதாகவும், தீபக்கின் உடலில் 45 சதவிகிதம் ஆல்கஹால் இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர் மது அருந்தும் பழக்கமே இல்லாத தீபக் இதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். காவலர்களிடம், தனக்கு மது அருந்தும் பழக்கமே இல்லை எனவும், உங்களுடைய இயந்திரம் கோளாறாக உள்ளது எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தொடர்பாக ரசீதில் கையெழுத்திடுங்கள் என போலீசார் வற்புறுத்தியுள்ளனர். தொடர்ந்து தீபக் தான் மது அருந்தவில்லை என வாக்குவாதம் செய்ததால் போலீசார் வாகனத்தில் இருந்த மற்றொரு ப்ரீத் அனலைசர் இயந்திரத்தை எடுத்து 2 முறை சோதனை செய்தபோது, 2 முறையும் தீபக் மது அருந்தலில

திருவள்ளூரில் கைதான டாஸ்மாக் மேலாளர்-பார் உரிமத்துக்கு ரூ.1 லட்சம் லஞ்சம்

Image
  திருவள்ளூரில் பார் உரிமம் கேட்டு விண்ணப்பித்தவரிடம் ஒரு லட்ச ரூபாயை லஞ்சமாக வாங்கிய டாஸ்மாக் மேலாளரை, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்துள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டத்தில் கிழக்கு, மேற்கு என் 2 மாவட்டங்களாக பிரித்து டாஸ்மாக் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில் 137 டாஸ்மாக் கடைகள் உள்ளன.    இந்நிலையில், திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் அமைப்பதற்காக தாணு என்பவர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கலைமன்னனிடம் விண்ணப்பித்துள்ளார். அதற்கு, 'பார் நடத்த அனுமதி வழங்க ஒரு லட்சம் ரூபாயை லஞ்சமாக கொடுக்க வேண்டும் இல்லையேல் ஏற்கனவே செயல்பட்டு வரும் பாரையும் இழுத்து மூடுவேன்' என கலைமன்னன் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே. காக்களூர், வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் பார் நடத்தி வரும் தாணு, தன்னிடம் ஒரு லட்சம் கேட்டதால் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.  இதனையடுத்து காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்வாழ்த்து தெரிவிக்கனுமா... இதோ ஸ்பெஷல் ஏற்பாடு...

Image
  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் செல்பி எடுக்கவும், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் பிறந்தநாள் முதல்வரின் 70வது பிறந்தநாளை கொண்டாட திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு புதுமையான வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் மார்ச் 1ஆம் தேதி தனது 70வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களையும் கல்வித் திட்டங்களையும் தொடங்கி வைத்துள்ளார். பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணங்கள், குழந்தைகளுக்கு தொலைநோக்கு கல்வித் திட்டங்கள், கார்ப்பரேட் உலகிற்கு வணிகச் சார்பான முயற்சிகள் உள்ளிட்டவையும் அதில் அடங்கும்.  இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வை நினைவுகூரும் வகையில், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இரண்டு புதுமையான வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.  அதன்படி, கட்சி தொண்டர்கள், தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நலம் விரும்பிகள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். முதன்முறையாக முதலமைச்சரா

ஓய்வுபெறும் சைலேந்திர பாபு: சட்டம் - ஒழுங்கு டிஜிபி பதவிக்கு , ஏ.கே.விஸ்வநாதன்,சங்கர் ஜிவால் கடும் போட்டி

Image
  ஜூன் மாதத்துடன் ஓய்வுபெறும் சைலேந்திர பாபு: சட்டம் - ஒழுங்கு டிஜிபி பதவிக்கு ஏ.கே.விஸ்வநாதன், சங்கர் ஜிவால், கடும் போட்டி ஏ.கே.விஸ்வநாதன்,சங்கர் ஜிவால்,  சென்னை: வரும் ஜூன் மாதம் டிஜிபி சைலேந்திர பாபு ஓய்வு பெற உள்ள நிலையில், சட்டம்-ஒழுங்குடிஜிபி பதவியைப் பெற சென்னைகாவல் ஆணையர் சங்கர் ஜிவால், முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. தமிழக காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு டிஜிபி என்பது முக்கியப் பொறுப்பாகும். காவல் துறையில் அதிக அதிகாரம் கொண்டது இந்தப் பதவி. பிற பிரிவுடிஜிபிக்கள் உள்பட அனைத்து அதிகாரிகளின் பணியிட மாற்றம், பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்தும் அவர் ஒப்புதல் அளித்த பிறகே நடைமுறைக்கு வரும். தமிழக முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் காவல் துறை உள்ளதால், தினமும் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக முதல்வரிடம் நேரடித் தொடர்பில் இருக்கலாம். இதனால், ஒவ்வொரு ஐபிஎஸ் அதிகாரியும் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி ஓய்வுபெற வேண்டுமென்று விரும்புவர். இந்நிலையில், சட்டம்-ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திர பாபுவின் பதவி நீட்டிப்புக் காலம் வரும் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைக

தெய்வத்திருமகள்... தந்தைக்கு கல்லீரலை தானமாக வழங்கிய 17 வயது சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்..!

Image
  தந்தையின் உடல்நிலை, குடும்பத்தின் வறுமை நிலை, லட்சக்கணக்கில் செலவு போன்றவற்றை அறிந்து பரிதவித்த பிரதீஷின் மகள் தனது கல்லீரலை தந்தைக்கு தானமாக வழங்கினார். கேரளாவின் திருச்சூர் பகுதியை சேர்ந்த பிரதீஷ் (48) கணினி மையம் நடத்தி வருகிறார். இவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். தந்தையின் உடல்நிலை, குடும்பத்தின் வறுமை நிலை,  லட்சக்கணக்கில் செலவு போன்றவற்றை அறிந்து பரிதவித்த பிரதீஷின் மகள் நந்து (17), தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்க முன்வந்தார். சட்டவிதிகளின் படி சிறார் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியாது. இதனால் உயர் நீதிமன்றத்தில் நந்து மனு தாக்கல் செய்து சிறப்பு அனுமதி பெற்றார். அதன் பிறகு நந்துவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கல்லீரலில் கொழுப்பு படிந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. தந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று துடித்த நந்து தனது உணவுப் பழக்கத்தை முழுமையாக மாற்றினார். அருகில் உள்ள

எழுத்தாளர்களுக்கு வீடுகள்; அரசாணை வெளியீடு

Image
  2022-23ஆம் ஆண்டுக்கான கனவு இல்லத் திட்டத்திற்கு பத்து தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வீடுகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள்  முதலமைச்சர்  கலைஞர் அவர்களின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 03.06.2021 அன்று, ”தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்” என்று கனவு இல்லத் திட்டத்தை அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கிணங்க, 2021-22ஆம் ஆண்டிற்கான கனவு இல்லத் திட்டத்திற்கு, சாகித்ய அகாதமி விருது மற்றும்  கலைஞர்  மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற ந.செகதீசன் என்கிற  ஈரோடு தமிழன்பன் , சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞர் புவியரசு என்கிற  சு.ஜகன்னாதன் , கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற முனைவர்  இ.சுந்தரமூர்த்தி , சாகித்ய அகாதமி விருது பெற்ற  பூமண

தனது வீட்டுக்கு தானே பெட்ரோல் குண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி கைது !

Image
  கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோவில் தெருவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவ தொடர்பாக துறையினரின் தீவிர விசாரணையில், தனது வீட்டுக்கு தானே பெட்ரோல் குண்டு வீசிய சக்கரபாணியை காவல்துறையினர் கைது செய்தனர். தனது பெயர் பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காக பெட்ரோல் குண்டு வீசியதாக காவல் துறையினரிடம் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலக்காவேரி காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் சக்கரபாணி இந்து முன்னணி அமைப்பின் நகர தலைவராக உள்ளார். இன்று காலை இவரது வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக எழுந்த புகாரினால் பரபரப்பு அதிகமானது. இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. காவல்துறையினரின் மோப்பநாய் டபி வரவழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. இந்நிலையில்சக்கரபாணி மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழவே, இன்று மாலை சக்கரபாணியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காவல்துறையினர் சக்கரபாணியிடம் விசாரணை நடத்தினர். இதில் தனது பெயர் பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காக தானே தனது வீட்டில் பெட்ரோல் குண்டு