பெண் ஆசிரியர்.. மேஜையில் இருந்த மதுபாட்டில்கள்: கர்நாடகாவில் அதிர்ச்சி!

 


கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கங்கலக்ஷ்மம்மா. இவர் கடந்த 5 ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையாகியுள்ளார்.

மேலும் குடித்து விட்டு மாணவர்களுக்குப் பாடம் எடுத்து வந்துள்ளார். இதனால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி அறிந்தும் சக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அவரை எச்சரித்துள்ளனர்.

ஆனால் அவர் தொடர்ந்து குடித்துவிட்டே பள்ளிக்கு வந்து சென்றுள்ளார். இதனால் இவர் மீது பெற்றோர்கள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு செய்தனர்.


அப்போது ஆசிரியர் கங்கலக்ஷ்மம்மா மேஜையின் டிராயரை திறந்துபார்க்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர். பின்னர் திறந்துபார்ததபோது அதில் மது பாட்டில்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)