ஆர்கேநகர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கத்தியுடன் சுற்றிய 5 பேர் கைது!


 சென்னை ஆர்கேநகர் பகுதியில் இருந்து அப்பகுதியை  சேர்ந்த பக்தர்களால் விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக 
ஊர்வலத்தின் போது மது அருந்தி விட்டு கத்தியுடன் சுற்றிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.ஊர்வலாமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது ஊர்வலத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியை வைத்து கொண்டு 5 இளைஞர்கள் தங்களுக்குள்ளேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இவர்களின் அட்டகாசத்தை பார்த்து அச்சமடைந்த பொதுமக்கள் ஆர்கே நகர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் நாகேந்திரன், தமிழ்செல்வன், ஆனந்த், இம்ரான், சம்மையா என தெரியவந்தது. தொடர்ந்து ரவுடிகள் போல் ஊர்வலத்தில் கத்தியுடன் உலா வந்ததை உறுதி செய்ததையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 பேரையும் சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: அசோக்குமார், சென்னை

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)