ஒத்தப்பட்டியில் ஊராட்சி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருத்து விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசியல் தகவல்

 


தேனி மாவட்டம் சஉத்தமபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ஒத்தப்பட்டியில் ஊராட்சி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருத்து விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசியல் தகவல் கிடைத்துள்ளது.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து பணி மேற்கொண்டு அந்த வழியே சந்தேகபடும் படியாக வந்த ஒத்தப்பட்டியை சேர்ந்த பாலமுருகன்(22),  ராமர் (38), மற்றும் கம்பம் வடக்கு பட்டியை சேர்ந்த பிரகாஷ் (27) ஆகிய 3 பேரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் ராயப்பன்பட்டியை சேர்ந்த அமலன் (29) என்பவர் திருச்சியில் விற்பனை செய்வதற்காக பாலமுருகனிடம் கஞ்சாவை வாங்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து அவர்களிடமிருந்து  2½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து கஞ்சா வழக்கில் கைதான நான்கு பேரையும் ராயப்பன்பட்டி போலீசார் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்-வே.பிரசாத் குமார் தேனி

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)