கள்ளச்சாராய விற்பனையை தடுக்காத காவல் நிலையம் : ஆய்வாளர் உள்ளிட்ட 30 பேரை டிரான்ஸ்ஃபர் செய்த டிஐஜி !!

 வாணியம்பாடியில் சாராய விற்பனை தடுக்க தவறிய வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் பணியிடை மாற்றம் வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா உத்தரவு பிறப்பித்ததார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர், இந்திரா நகர், காமராஜ் நகர், மற்றும் லாலா ஏரி பகுதியில் கள்ளச்சாராயம் அதிக அளவில் விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் புகார் அளித்து சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி சாலையில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்ட சாராய கொட்டகைக்கு தீ வைத்து எரிப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா தனிப்படை அமைத்து உடனடியாக சாராய கும்பலை கைது செய்ய உத்தரவிட்டார் தொடர்ந்து சாராய வழக்கில் முக்கிய குற்றவாளியான மகேஸ்வரி உட்பட 20 பேரை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்த கள்ளச்சாராயம் கைப்பற்றி சிறையில் அடைத்தனர்.

அதை தொடர்ந்து பொதுமக்கள் புகார் அளித்து  நடவடிக்கை எடுக்க தவறிய வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் பழனி முத்து பணியிட மாற்றம் செய்து வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த 2 உதவி ஆய்வாளர்கள், 5 சிறப்பு உதவி ஆய்வாளர்கள்,7 தலைமை காவலர்கள், 4 பெண் காவலர்கள், 9 காவலர்கள் உட்பட 30 பேர் கூண்டோடு பணியிடமாற்றம் செய்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சாராயத்தை தடுக்கத் தவறிய ஆய்வாளர் உட்பட 30 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மகேஸ்வரியின் சாராய விற்பனையைத் தடுக்காத வாணியம்பாடி தாலுகா காவல் நிலையப் போலீஸார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்தக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பழனிமுத்து வேலூர் நில அபகரிப்புப் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அந்தப் பிரிவிலிருந்த பி.அருண்குமார் வாணியம்பாடி தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்காக உத்தரவை வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா பிறப்பித்திருக்கிறார்.
அதேபோல, அந்தக் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இரண்டு எஸ்.ஐ-க்கள் உட்பட மேலும் 29 காவலர்களும் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். யார் யார் எந்தெந்த காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
1. சப் இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் - திருப்பத்தூர் நகரக் காவல் நிலையம்.
2. சப் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் - ஆம்பூர் நகர காவல் நிலையம்.
3. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் காந்தி - திருப்பத்தூர் தாலுகா காவல் நிலையம்
4. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தயாளன் - அம்பலூர் காவல் நிலையம்
5. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் - திம்மாம்பேட்டை காவல் நிலையம்
6. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் - திம்மாம்பேட்டை காவல் நிலையம்
7. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் - அம்பலூர் காவல் நிலையம்
8. தலைமைக் காவலர் ரவிச்சந்திரன் - வாணியம்பாடி நகரக் காவல் நிலையம்
9. தலைமைக் காவலர் சங்கர் - நாட்றம்பள்ளி காவல் நிலையம்
10. தலைமைக் காவலர் பார்த்தசாரதி - வாணியம்பாடி நகரக் காவல் நிலையம்
11. தலைமைக் காவலர் ராமகிருஷ்ணன் - நாட்றம்பள்ளி காவல் நிலையம்
12. தலைமைக் காவலர் அண்ணாதுரை - நாட்றம்பள்ளி காவல் நிலையம்
13. தலைமைக் காவலர் முனுசாமி - உமராபாத் காவல் நிலையம்
14. தலைமைக் காவலர் சிவகுமார் - திம்மாம்பேட்டை காவல் நிலையம்
15. தலைமைக் காவலர் சரவணன் - ஆம்பூர் நகரக் காவல் நிலையம்
16. முதல்நிலைக் காவலர் பாஸ்கர் - வாணியம்பாடி நகரக் காவல் நிலையம்
17. பெண் முதல்நிலைக் காவலர் பாரதி - வாணியம்பாடி நகரக் காவல் நிலையம்
18. முதல்நிலைக் காவலர் ஞானசேகரன் - அம்பலூர் காவல் நிலையம்
19. பெண் காவலர் சிவகாமி - வாணியம்பாடி நகரக் காவல் நிலையம்
20. காவலர் செந்தில்குமார் - வாணியம்பாடி நகரக் காவல் நிலையம்
21. காவலர் பெருமாள் - அம்பலூர் காவல் நிலையம்
22. காவலர் அருண்குமார் - வாணியம்பாடி நகரக் காவல் நிலையம்
23. காவலர் ராஜசேகர் - கந்திலி காவல் நிலையம்
24. காவலர் வினோத் - அம்பலூர் காவல் நிலையம்
25. காவலர் அன்பரசன் - அம்பலூர் காவல் நிலையம்
26. பெண் காவலர் சுஷ்மா - திருப்பத்தூர் தாலுகா காவல் நிலையம்
27. காவலர் ஏழுமலை - ஆலங்காயம் காவல் நிலையம்
28. காவலர் தினேஷ்குமார் - திம்மாம்பேட்டை காவல் நிலையம்
29. காவலர் ராஜ்குமார் - ஆலங்காயம் காவல் நிலையம்.
May be an image of 9 people and people standing

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)