வசமாக சிக்கிய திமுக நிர்வாகிகள்.. 3 பேரை கைது செய்த தேர்தல் பறக்கும் படை!!

 


கோவை : வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் சுற்றிவளைத்த பாஜகவினர் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்தனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளை காண தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் , வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் வினியோகம் செய்வதில் , அதிமுக மற்றும் திமுக வினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சியின் உடைய 70வது வார்டுக்குட்பட்ட , தெப்பக்குள மைதானம் மற்றும் சுக்ரவார் பேட்டை பகுதிகளில் , திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அங்கு விரைந்த பாஜகவினர், பணம் வினியோகம் செய்த 6 பேரில், மூன்று பேரை சம்பவ இடத்திலேயே சிறைப்பிடித்தனர்.

இதுகுறித்து உடனடியாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்க வந்த அதிகாரிகள், சிறைப்பிடிக்கப்பட்ட திமுகவை சேர்ந்த மூன்று பேரை மீட்டதோடு , அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை