கோவையில் நடந்த ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்: ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீது வழக்குப் பதிவு

 கோவை: கோவையில் காவல்துறையினரை பணி செய்ய விடாமல், ரகளையில் ஈடுபட்டதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை விளாங்குறிச்சி தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு எதிராக த.பெ.தி.க, நாம்தமிழர் உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி வளாகத்திற்கு வெளியே நின்றிருந்த நபர்களை காவல்துறையினர் உள்ளே செல்ல அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இதனால், காவலர்களுக்கும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் தள்ளு முள்ளு ஏற்பட்டது.


இந்த விவகாரம் தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாவட்ட செயலாளர் முருகன், பாஜகவை சேர்ந்த காளிதாஸ், இந்துமுன்னணியை சேர்ந்த கோவிந்தன், ஆர் எஸ் எஸ் அமைப்பின் அருண், கருப்புசாமி ஆகிய ஐந்து பேர் மீது இரு பிரிவுகளில் பீளமேடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் , சட்ட விரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!