பேருந்தை இயக்கும்போது மாரடைப்பு - மரணிக்கும் தருவாயிலும் 30 உயிர்களை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்


 மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி காலை 6 மணிக்கு கொடைக்கானல் வரை செல்லும் அரசு பேருந்தில் இன்று வழக்கம் போல ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இதனை ஓட்டுநர் ஆறுமுகம் இயக்கினார்.  தொடர்ந்து பேருந்து குரு தியேட்டர் சிக்னல் அருகில் சென்று கொண்டிருந்த போது சற்று நிலை தடுமாறியதை உணர்ந்த பேருந்தின் நடத்துனர், ஓட்டுநர் ஆறுமுகத்திடம் கேட்டபோது திடீரென  சாலையில் ஓரத்தில் நிறுத்தி ஸ்டேரிங் மீது விழுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடத்துனர் உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்த நிலையில், அங்கு வந்த வந்தவர்கள் ஆறுமுகத்தை பரிசோதித்த போது மாரடைப்பால் உயிரிந்துள்ளார் என்பது தெரியவந்தது. அதிகாலையில் 30 பயணிகளுடன் பயணித்த பேருந்தின் ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போதும் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

தொழிலாளர் சட்ட உரிமைகள் தொழிற்சங்கம் மதுரை மண்டல நிர்வாகிகள் மண்டல தலைவர் பழனிராஜ் கூறுகையில், மதுரையில் எப்போதும் கிளம்பும் கொடைக்கானல் வண்டியை ஆறுமுகம் இயக்கியுள்ளார். இந்த வண்டி மதுரை டூ கொடைக்கானல், கொடைக்கானல் டூ மதுரை, மதுரை டூ கோவை, கோவை டூ மதுரை என வந்து செல்லும் இந்த சூழலில் தொடர் பயணம் மேற்கொள்ளும் ஓட்டுநர்களுக்கு விரைவாக உடல் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. இப்படி பல்வேறு பேருந்துகள் 18 மணி முதல் 20 மணி நேரம் வரை இயக்கும் சூழல் தான் இருக்கிறது. இன்று உயிரிழந்த ஓட்டுநர் ஆறுமுகம் சாமத்தியமாக பேருந்தை நிறுத்தவில்லை என்றால் மிகப்பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். எனவே வரும் காலங்களில் இது போன்ற செயல் மாறவேண்டும். ஊழியர்களுக்கு தொடர் பணி என்பது இருக்கக்கூடாது. பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டும், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டும், நிர்வாக சீர்குலைவு ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும்" என்றார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)