இந்தியாவை கலங்கடிக்கும் ஒமைக்ரான்: 11 மாநிலங்களில் 101 பேர் பாதிப்பு…மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!


 புதுடெல்லி: இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா இதுவரை 11 மாநிலங்களில 101 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் 90க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. அந்தவகையில் இந்தியாவில் இதுவரை 11 மாநிலங்களில் ஒமைக்ரான் வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 101 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 32, டெல்லியில் 22, ராஜஸ்தானில் 17, கர்நாடகாவில் 8, தெலங்கானாவில் 8, குஜராத்தில் 5, கேரளாவில் 5 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம், ஆந்திரா, மேற்குவங்கம், சண்டிகர் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா