திமுக எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட மக்கள் - செல்போன் எண்ணை கொடுத்து சமாதானப்படுத்திய ஆட்சியர்

 தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டிணம், தம்பிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ள சேதம் குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சாவூர் மாவட்ட  கண்காணிப்பாளர் மற்றும் தமிழக அரசின் முதன்மை செயலாளருமான விஜயகுமார், திமுக எம்எல்ஏ அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் மதுக்கூர் பகுதியில் ஆய்வு செய்து விட்டு பட்டுக்கோட்டை திரும்பிக் கொண்டிருந்தனர்.


தஞ்சை: திமுக எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட மக்கள் - செல்போன் எண்ணை கொடுத்து சமாதானப்படுத்திய ஆட்சியர்


தஞ்சை: திமுக எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட மக்கள் - செல்போன் எண்ணை கொடுத்து சமாதானப்படுத்திய ஆட்சியர்


பொதுமக்கள், எம்எல்ஏ, ஆட்சியர் மற்றும் அதிகாரிகளின் காரை வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், மொச்சிக்குளம்  பகுதி மிகவும் தாழ்வாக இருப்பதால், மழை நீர் வெளியேறாமல் தேங்கி நிற்கின்றது. இதனால் குடியிருக்கும் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேங்கியுள்ள மழை நீரில் விஷ ஜந்துக்கள் இருப்பதால்,அதில் நடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்களை கடித்தால், பெரும் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.


இது குறித்து அதிகாரிகளிடம் மூன்று நாட்களாக மழை நீர் தேங்கி அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்தோம். ஆனால் அதிகாரிகள், எங்களின் நிலையை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இதனால் செய்தறியாமல் இருந்த நிலையில், மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏ உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதாக தகவல் வந்ததையடுத்து, முற்றுகை செய்தால் தான் நடவடிக்கை எடுப்பார்கள் என்று முடிவு செய்தோம். அதன் படி முற்றுகை செய்ததால், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் நாங்கள் கலைந்து சென்றோம் என்றார்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)