வாணியம்பாடி அருகே வாகன ஓட்டியை கன்னத்தில் அறைந்த சிறப்பு உதவி ஆய்வாளரை திருப்பி அடித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது
1/ 5
வாணியம்பாடி அருகே வாகன ஓட்டியை கன்னத்தில் அறைந்த சிறப்பு உதவி ஆய்வாளரை திருப்பி அடித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
2/ 5
திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்காயம் அருகே நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்( வயது30). இவர் இருசக்கர வாகனத்தில் ஆலங்காயம் வந்துள்ளார். அப்போது ஆலங்காயம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உமாபதி தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
3/ 5
அப்போது மணிகண்டன் வந்த இருசக்கர வாகனத்தை சோதனைக்காக காவல் துறையினர் நிறுத்தக் கூறியும் நிற்காமல் சென்றதால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உமாபதி, மணிகண்டனை துரத்தி சென்று அவரை தாக்கினார்.
4/ 5
இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் பதிலுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் மீது தாகுத்தல் நடத்தி உள்ளார். பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5/ 5
இதனுடைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பரவி வருகின்றது. இதனை தொடர்ந்து மணிகண்டனை போலீஸ் தாக்கியதில் காயம் அடைந்ததாக கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் ஆணிவேராக கிராமங்களும், கிராம பஞ்சாயத்துகளும் கருதப்படுகிறது. கிராமங்களுக்கு அரசியல் அதிகாரமளித்தல் என்பது மிகவும் தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் அந்த அதிகாரம் ஆபத்தானதாக சென்று கொண்டிருப்பது தான் உள்ளாட்சி அமைப்புகளின் பிரச்சனையாக கருதப்படுகிறது . தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக உள்ளாட்சித்தேர்தல் நடந்து முடிந்து வெற்றி, தோல்வி முடிவுகள் வெளியாகி வருகிறது. இந்திய பிரதமர் ஆனது போல சிலர் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் புகைப்படத்தை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஆரவாரம் செய்வதை காணமுடிகின்றது. ஏன் அவர்களுக்கு இந்த வெற்றி இவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதை பொதுமக்களும், வாக்காளார்களும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சாதாரண கிராம ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு வருவதால் சம்பந்தப்பட்ட நபருக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை எனது இந்த பதிவில் காணலாம். உங்களுக்கு ஒன்று தெரியுமா ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு வரும் நபருக்கு மாதச்சம்பளம் போல சம்பளம் எதுவுமே கிடையாது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.. ஆனால் இது தான் உண்மை . சம்பளமே இல்லாத ஒரு பதவிக்கு ஏன் அவர்கள் இந்த போ
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,தற்போது செல்போன் மூலம் வங்கி பண பரிமாற்றம், முன்பதிவு ரயில் டிக்கெட்டுகள் பதிவு செய்வது போன்ற பல்வேறு பணிகள் விரைவாகவும், எளிதாகவும் நடைபெற்று வருகிறது. முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளையும் செல்போன் மூலம் பதிவு செய்யும் வசதி ஏற்கனவே நடப்பில் உள்ளது. இருந்தாலும் செல்போன் வைத்திருக்கும் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்த ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள். இந்த வசதியை பயன்படுத்தினால் நீண்ட நேரம் பயணச்சீட்டு பதிவு மையங்கள் முன் காத்திருக்க வேண்டியதில்லை. உரிய நேரத்தில் ரயில்களில் ஏறி பயணம் செய்யலாம். பெரும்பாலும் முன்பதிவில்லாத பயணிகள் பயணச்சீட்டுகள் பெற கடைசி நேரத்தில் வரும் சூழல் உள்ளது. எனவே இருக்கின்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கால நேர விரயத்தை தவிர்க்கலாம். செல்போனில் உள்ள ப்ளே ஸ்டோரில் யூடிஎஸ் ஆப் என்ற செயலியை எளிதாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்பு அதில் செல்போன் எண், பெயர், பாஸ்வேர்டு, பாலினம், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். அதை சமர்ப்பிக்கும் போது நமது தகவல்களை சரிபார்க்க ஒரு ஓடிபி வரும். அதையும் செல்போ
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து காவல்துறையினருக்கும் அறிவுரை கூறி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு காவல் நிலையங்களில் தீர்வு கிடைக்காத பட்சத்தில், அதை உயர் அதிகாரிகளிடம் கொண்டு செல்லும்போது சம்பந்தப்பட்ட காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும் சில காவல் துறையினர் அதிகாரத்தில் உச்சத்தில் தாங்களே இருப்பதாகவும், தாங்கள் யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என கருதுவதாகவும் டிஜிபி கருத்து தெரிவித்துள்ளார். இந்த எதிர்மறையான அணுகுமுறை காரணமாக சில காவல்துறையினர் புகார் அளிக்க வரும் பொதுமக்களை நேரடியாகவே வசைபாடும் சூழ்நிலையும் இருந்து வருவதாக தெரிவித்துள்ள அவர், இது இது பொதுமக்கள் மனதில் காவல்துறை மீதான நம்பிக்கையை குறைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், எந்தவொரு துறையிலும் சரியான அணுகுமுறை இருந்தால் மட்டுமே ஒரு அதிகாரியால் தங்கள் இலக்குகளை தொழிலிலும், வாழ்க்கையிலும் அடைய முடியும் என தெரிவித்துள்ள டிஜிபி, எந்தவொரு பதவியும் அதிகாரத்திற்கானதல்ல எனவும் மக்களுக்கான சேவையாற்ற