வாணியம்பாடி அருகே வாகன ஓட்டியை கன்னத்தில் அறைந்த சிறப்பு உதவி ஆய்வாளரை திருப்பி அடித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது
1/ 5
வாணியம்பாடி அருகே வாகன ஓட்டியை கன்னத்தில் அறைந்த சிறப்பு உதவி ஆய்வாளரை திருப்பி அடித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
2/ 5
திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்காயம் அருகே நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்( வயது30). இவர் இருசக்கர வாகனத்தில் ஆலங்காயம் வந்துள்ளார். அப்போது ஆலங்காயம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உமாபதி தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
3/ 5
அப்போது மணிகண்டன் வந்த இருசக்கர வாகனத்தை சோதனைக்காக காவல் துறையினர் நிறுத்தக் கூறியும் நிற்காமல் சென்றதால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உமாபதி, மணிகண்டனை துரத்தி சென்று அவரை தாக்கினார்.
4/ 5
இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் பதிலுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் மீது தாகுத்தல் நடத்தி உள்ளார். பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5/ 5
இதனுடைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பரவி வருகின்றது. இதனை தொடர்ந்து மணிகண்டனை போலீஸ் தாக்கியதில் காயம் அடைந்ததாக கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் ஆணிவேராக கிராமங்களும், கிராம பஞ்சாயத்துகளும் கருதப்படுகிறது. கிராமங்களுக்கு அரசியல் அதிகாரமளித்தல் என்பது மிகவும் தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் அந்த அதிகாரம் ஆபத்தானதாக சென்று கொண்டிருப்பது தான் உள்ளாட்சி அமைப்புகளின் பிரச்சனையாக கருதப்படுகிறது . தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக உள்ளாட்சித்தேர்தல் நடந்து முடிந்து வெற்றி, தோல்வி முடிவுகள் வெளியாகி வருகிறது. இந்திய பிரதமர் ஆனது போல சிலர் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் புகைப்படத்தை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஆரவாரம் செய்வதை காணமுடிகின்றது. ஏன் அவர்களுக்கு இந்த வெற்றி இவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதை பொதுமக்களும், வாக்காளார்களும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சாதாரண கிராம ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு வருவதால் சம்பந்தப்பட்ட நபருக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை எனது இந்த பதிவில் காணலாம். உங்களுக்கு ஒன்று தெரியுமா ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு வரும் நபருக்கு மாதச்சம்பளம் போல சம்பளம் எதுவுமே கிடையாது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.. ஆனால் இது தான் உண்மை . சம்பளமே இல்லாத ஒரு பதவிக்கு ஏன் அவர்கள் இந்த போ...
டிக்டாக்கில் தன்னை காதலிப்பது போல உணர்ச்சி வசப்பட்டு வீடியோக்களை பதிவிட்டு வரும் விபரீதச் செயலை நிறுத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட துணை நடிகையை அறிவுறுத்துங்கள் என்று நகைச்சுவை நடிகர் யோகிபாபு வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழ் திரை உலகில் 18 வருட கடின உழைப்பால் முன்னணி நகைச்சுவை நட்சத்திர அந்தஸ்தை எட்டிப்பிடித்திருப்பவர் நடிகர் யோகிபாபு..! இவரை காதலிப்பது போல நடித்து வீடியோ பதிவிட்டு வந்த துணை நடிகை சுஜி என்பவர் யோகிபாபுவுக்கு திருமணம் ஆன நாள் முதல் காதல் தோல்வி அடைந்தது போல டிக்டாக்கில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு சர்ச்சையை பற்ற வைத்தார் ...! அவரது வீடியோவால் அண்மையில் திருமணம் முடிந்த கையோடு தொடர்ந்து படப்பிடிப்புகளில் பங்கேற்று வரும் நடிகர் யோகிபாபு, குடும்பத்தில் குழப்பம் வந்துவிடக்கூடாது என்று உஷாராகி விசாரித்ததாக கூறப்படுகின்றது. வீடியோ வெளியிட்ட துணை நடிகை தனது தீவிர ரசிகை என்றும் லைக்குகளை குவிக்க காமெடிக்காக இது போன்று செய்து வருவதும் தெரியவந்துள்ளது. இருந்தாலும் அந்த பெண் தொடந்து அழுது கொண்டே வீடியோ வெளியிடுவதால் யோகிபாபு கடும் அதிர்ச்சியில் இருந்துள்ளார். இது தொடர்பாக கோவாவில் படப...
நெல்லை போலீஸ் விசாரணைக்கு வந்தவர்களை ஏஎஸ்பி பல்லை பிடிங்கி சித்தரவதை செய்யப்பட்ட விவகாரத்தில் விகேபுரம் தனிப்பிரிவு காவலர் போகன், கல்லிடைகுறிச்சி தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் ஆயுதப டைக்கு மாற்றம் செயது நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை மீது அதிருப்தியில் உள்ள சமூக ஆர்வலர்கள் அரசை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர். எத்தனையோ பாரம்பரிய வரலாறு கொண்ட மாவட்டங்களில் நெல்லையும் ஒன்று. அதே சமயம் குற்ற சம்பவங்களில் பதட்டமான மாவட்டமும்கூட. இந்நிலையில், இங்கு சட்ட ஒழுங்கை பேணி காப்பதில் காவல்துறைக்கு மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் உள்ளது. அவ்வாறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தாமல் ஒரு தனி தண்டனை சாம்ராஜ்யத்தை உருவாக்கி கைதிகளின் பற்களை பிடுங்கியதாக ஏஎஸ்பி பல்வீர் சிங்க் மீது குரூர குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. இவரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்தபோதே அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக பார்க்கப்பட்டது. இப்போது விசாரணை நடந்து வரும் நிலையில் முக்கிய சாட்சியான சூர்யா கீழே விழுந்து பல் உடைந்ததாக மீடியா முன்பு கூறி பரபரப்பை கிளப்...