ஆற்காடு அருகே அரசு பேருந்தின் மீது வேன் மோதியதில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 5 பேருக்கு படுகாயம்

 


அரசு பேருந்து  நம்பர்.36 ஆற்காட்டிலிருந்து சக்கரமல்லூர் வழியாக  நாட்டேரிக்கு 

 கிராமத்திற்குச் சென்று சுமார் 4 மணி அளவில்  திரும்பி ஆற்காடு நோக்கி வந்துகொண்டிருந்தபோது   புதுப்பாடி ஏரிக்கரை நெடுஞ்சாலையைநெருங்கும்போது  

ஆற்காட்டிலிருந்து 6க்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர்களை  ஏற்றிக்கொண்டு புதுபாடியை  நோக்கி  தோஸ்த் மினி  வேன்  அதி வேகமாக வந்து மோதியதில் மினிவேன் நொறுங்கி வேனில் இருந்த டிரைவர், கிளீனர்  இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டது

 


மேலும் அரசுப் பேருந்து  ஓட்டுனர் சக்கரமல்லூர் கன்னிகாபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவருக்கு கால் முறிவு  ஏற்பட்டது பேருந்தில் பயணம் செய்த இரண்டு பெண்களுக்கு கால் மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது

 இவர்களை அங்குள்ள பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவர்கள்  சிகிச்சை  பெற்று வருகின்றனர்  இச்சம்பவத்தால்  அப்பகுதியில் பெரும் சிறிது நேரம்  பரபரப்பு ஏற்பட்டது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)