‘இல்லம் தேடிக் கல்வி’ எப்படி செயல்படும்? - ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்க திட்டம் : அமைச்சர் பேச்சு!

 


குழந்தைகளின் உடல் நலனை மனதில்கொண்டு நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் "இல்லம் தேடிக் கல்வி" பயிற்சிப் பணிமனை, மற்றும் இத்திட்டத்தில் இணையும் தன்னார்வலர்களுக்கான இணையதளம் ஆகியவற்றை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலம் தன்னார்வலர்களை இணைப்பதற்கான இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஆர்வமாக பலர் பதிவு செய்ய முன்வர வேண்டும்.

இந்த திட்டத்தை நாம் அனைவரும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மாலை 5 மணி முதல் 7 மணி வரை கல்வி மையங்களுக்கு அனுப்ப வேண்டும்.

20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்கிற விகிதத்தில் இந்த திட்டமானது நடைமுறையில் இருக்கும். தொடர்ந்து 6 மாத காலத்திற்கு இந்த திட்டம் செயல்படும். திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்த கற்றல் வழி வகுப்புளை எல்லாம் அந்தந்தப் பள்ளி நிர்வாகமே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் இடைவெளியை இந்த திட்டம் குறைக்கும்.

இதற்காக 200 கோடி ரூபாய் அளவிற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தன்னார்வளர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க ஆலோசித்து வருகிறோம்.

‘இல்லம் தேடிக் கல்வி’ எப்படி செயல்படும்? - ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்க திட்டம் : அமைச்சர் பேச்சு!

கதை சொல்வது, பாடல் பாடுவது போன்ற செயல்பாடுகளும் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் கொரோனாவிற்கு பின்னர் கல்வி இடைநிற்றலில் ஒரு லட்சம் மேல் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் உள்ளனர். இந்த இல்லம் தேடி கல்வி திட்டம் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை என இரண்டு குழுக்களாக வகுப்புகள் நடைபெறும்.

தற்போது 1 முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது பற்றி மட்டுமே முடிவு செய்துள்ளோம். தற்போது வரை நர்சரி பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்யவில்லை. வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்த பின்னர் தான் நர்சரி பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

பள்ளி கல்வித்துறை சார்பில் வகுப்புகள் வாரியாக கையேடு தயார் செய்து தன்னார்வலர்களுக்கு கொடுக்கப்பட்டு வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)