ராணிப்பேட்டை காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாஉசி சிதம்பரனார் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு பிறந்தநாள் விழா

 


ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று 05. 09. 21 முத்து கடை காந்தி சிலை அருகே கப்பலோட்டிய தமிழன் 

வ .உ .சிதம்பரனார் 150 ஆவது பிறந்த பிறந்தநாள் விழாவும் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான ஆசிரியர் தின விழாவும் ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் அண்ணாதுரை தலைமையில் கொண்டாடப்பட்டது 

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் ஆசிரியர் 

ஏ.நாமதேவன் கலந்துகொண்டு கப்பலோட்டிய தமிழன் 

வ உ சி மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்


மேலும் இந்த நிகழ்ச்சியில் பி மோகன் வரவேற்புரையாற்றினார்  பேச்சாளர்கள் மாவட்டத் தலைவர்எஸ்சி.எஸ்டி வி.நாகேஷ், வசீகரன், சிறப்புரையாற்றினார்கள்சிறப்பு விருந்தினர்களாக

பி.மோகனசுப்பிரமணியம், ஆர்.கே குப்புசாமி, ஆறுமுகம், என்ஜினியர் பிரகாஷ், முருகன், புலவர் ரங்கநாதன், உத்தமன், ஓட்டேரி பிரகாஷ், ஆர் சி உதயகுமார், காந்தி, ராமதாஸ், ஜெயவேலு, மாசிலாமணி, தினகரன் உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் நிறைவாக கப்பலோட்டிய தமிழன் 

வ உசி சிதம்பரனாருக்கு மணிமண்டபம் அமைக்க ஆணை பிறப்பித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)