ஈயம் பித்தளைக்கு கூட்டுறவு வங்கியில் தங்க நகைக்கடன்.. ஆய்வில் அம்பலமான டிசைன் டிசைனான மோசடி.

 


தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான ஆய்வு நடந்து வரும் நிலையில், ஈயம் மற்றும் பித்தளையில் செய்யப்பட்ட சுவரிங் நகைகளை அடகு வைத்தும், ஒரே நபர்கள் நூற்றுக்கணக்கில் நகைக்கடன் பெற்றும் மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. நகைக்கடன் தள்ளுபடிக்காக அதிகாரிகள் துணையுடன் அரங்கேறிய கூட்டுறவு மோசடி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் 5சவரன் வரையிலான நகைகளை அடமானம் வைத்து பெறப்பட்ட நகை கடன் தபிாளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தகுதியான பயனாளிகளை கண்டறிய மாநிலம் முழுவதும் கூட்டுறவு வங்கியில் தகைக் கடன் பெற்றவர்களின் விபரங்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டார்,அதன்படி நடத்தப்பட்ட ஆய்வில் நகைக்கடன் பெறுவதில் டிசைன் டிசைனாகமோசடிகள் தடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர், கூட்டுறவு சங்கத்தில் திகைகளை அடகுவைக்காமலேயே வைத்தது போல் கணக்கு காட்டி சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு மோசம் நடந்துள்ளது. நாமக்கல் மல்லசமுத்திரம் நொட்கக வேளாண்மை கூட்டுறவுவைக்காமலேயே வைத்தது போல் கணக்கு காட்டி சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது. நாமக்கல் மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறன சங்கத்தில் அதன் நிர்வாகக் குழு இயக்குநரான கிருஷ்ணசாமி என்பவர் மட்டும் 10 பொட்டலங்களில் ஈயம், பித்தளையில் செய்த கவரிங் நகைகளை வைத்துலட்ச ரூபாய்க்கு மேல் கடன் பெற்றது தெரியவந்துள்ளது.

எப்படியும் நகைக்கடனை தள்ளுபடி செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில், அதிகாரிகள் துணையுடன் குமரி மாவட்டம் கீழ்குளத்தில் ஒரே நபர் 5 சவரனுக்கு உட்பட்டு 625 நகைக்கடன்கள் மூலம் ஒன்றேகால் கோடி ரூபாயை நகைக்கடனாக பெற்றிருந்ததும், அதே சங்கத்தில் மற்றொரு நபர்.647 நகைக் கடன்கள் மூலம் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் கடன் பெற்றதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சேலம் காடையம்பட்டி மற்றும் தரும்புரி பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவ சங்கங்களில் ஒரே நபா 242 கிலோ நகைகளை அட்டுவைத்து 72லட்சம் ரூபாய்க்கு 384 நகைக்கடன்கள் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திருவண்ணாமலை -மாவட்டத்தில் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் 614 நகைக்கடன்கள் மூலம் 1கோடியே 63லட்சம் ரூபாய் கடனும், மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 641 நகைக் கடன்கள் மூலம் 2கோடி ரூபாய் அளவுக்கும்கடன் பெற்றிருக்கின்றனர். ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தியும் 600-க்கும் மேற்பட்ட நகைக் கடன்கள் மூலம் கமரர் இரண்டரை கோடி ரூபாய் அளவுக்கு கடன் திருவண்ணாமலையில் பொப்பட்டுள்ளது சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஓரே நபருக்கு 300 கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

வறுமை கோட்டிற்கு கீழுள்ள ஏழைகளுக்கான அந்தியோதயர் அள குடும்ப அட்டைகளை பயன்படுத்தி மதுரை மாவட்டம் பாப்பையாபுரம், சுந்தரலிங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 70லட்சம் ரூபாய்க்கு 300 நகைக்கடன்கள் வழங்கியதும் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் குன்றக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2 கிலோவிற்கும் அதிகமான நகைகளை அடகு வைத்து 82லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர்.

நாகையைச் சேர்ந்தவரின் குடும்ப அட்டையை வைத்து மதுரை உசிலம்பட்டி கூட்டுறவு சங்கத்தில் ஒரு கிலோ நகைகளை அடமானம் வைத்து கடன் பெறப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் நகை அடகுகடைக்காரர் ஒருவர் கூட்டுறவு வங்கியில் 25 நகைக்கடன் பெற்றதும். மேலும் பல இடங்களில் குறைந்த வட்டியில் நகைக்கடன் வாங்கி வெளியில் அதிக வட்டிக்கு கடன் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

இப்படி வழங்கப்பட்ட பெரும்பாலான நகைக்கடன்கள் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி சலுகையை முறைகேடாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் பெறப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதால் சம்பத்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தங்க

முலாம் பூசப்பட்டாயம் பித்தளை நகைகளுக்கு எல்லாம் நக்ை கடன் வழங்கியகூட்டுறவு வங்கி வள்ளல் அதிகாரிகள், நல்ல வேளையாக பழைய இரும்புக்கு நகைகடன் வழங்கவில்லை !

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்