கடலூரில் பெற்ற மகனுக்கு கள்ளக்காதலனுடன் சேர்ந்து சூடு வைத்த தாய் கைது

 கடலூர் சூரப்பன்நாயக்கன்சாவடி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இறந்து விட்டார். இவரது இரண்டாவது மனைவி சாந்திதேவி (35). இவர்களுக்கு பாலசந்தர் (12) என்கிற மகன் உள்ளான். அந்த சிறுவன் காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். கொரோனா காரணமாக தற்போது பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடி படித்து வருகிறான். இந்நிலையில் சாந்திதேவிக்கும், சிதம்பரம் முத்துமாணிக்கம் நாடார் தெருவை சேர்ந்த முகமது முஸ்தபா மகனும், சித்த வைத்தியருமான சுகையில் அகமது (40) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களிடையே கள்ளக்காதலாக மாறியது. இதனால் சுகையில் அகமது அடிக்கடி சாந்திதேவியை பார்க்க வந்து சென்றுள்ளார்.



கடலூரில் பெற்ற மகனுக்கு கள்ளக்காதலனுடன் சேர்ந்து சூடு வைத்த தாய் கைது



இவர்களின் கள்ளக்காதல் பற்றி சிறுவன் பாலசந்தர் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறி வந்ததாக தெரிகிறது. இதை கேள்விப்பட்ட சாந்திதேவி தான் பெற்ற மகன் என்றும் பாராமல் பாலசந்தரை அடிக்கடி சூடு வைத்து அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மேலும் இது பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்து போன பாலசந்தர் இது பற்றி பேசுவதை நிறுத்தி விட்டான். இந்நிலையில் சாந்திதேவியை பார்க்க சுகையில் அகமது நேற்று அவரது வீட்டுக்கு வந்துள்ளார். இதை பார்த்த பாலசந்தர் தனது தாயிடம் அவர் ஏன்? அடிக்கடி நம் வீட்டுக்கு வருகிறார் என்று கேட்டுள்ளான், அவர்களின் கள்ளக்காதலுக்கும் இடையூறாக இருந்துள்ளான்.


கடலூரில் பெற்ற மகனுக்கு கள்ளக்காதலனுடன் சேர்ந்து சூடு வைத்த தாய் கைது

 
இதனால் ஆத்திரமடைந்த சாந்திதேவி, கள்ளக்காதலன் சுகையில் அகமதுவுடன் சேர்ந்து கொண்டு, தனது மகன் என்றும் பாராமல் இரும்பு குழாயை தீயில் பழுக்க வைத்து, சூடு வைத்துள்ளார். இதனால் வலி தாங்காமல் அலறி துடித்த சிறுவன் தெருவுக்கு ஓடியுள்ளான். அப்பொழுது அவனை வெளியே வைத்து கதவை பூட்டியுள்ளனர், சிறுவன் இரவு முழுவதும் தனியாக வெளியே உறங்கியுள்ளான். காலையில் இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் இது பற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில், சிறுவன் பாலசந்தர் நடந்த விவரத்தை கண்ணீர் விட்டு கதறி அழுதபடி கூறினான்.




கடலூரில் பெற்ற மகனுக்கு கள்ளக்காதலனுடன் சேர்ந்து சூடு வைத்த தாய் கைது


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக அவனது உடலில் சாந்திதேவி பல இடங்களில் சூடு வைத்த காயங்கள் இருந்தன. இது பற்றி திருப்பாதிரிப்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துையினர் வழக்குப்பதிவு செய்து, சாந்திதேவி, அவரது கள்ளக்காதலன் சுகையில் அகமது ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் சிறுவனை மீட்டு கடலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

 
இருப்பினும் பெற்ற மகன் என்றும் பாராமல் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்து அவனுக்கு கல் நெஞ்சம் படைத்த கொடூர தாய் சூடு வைத்ததோடு, நடுரோட்டில் தாக்கிய சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)