அரசு பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த கஜா : திக்திக் நிமிடங்கள்!!

 


நீலகிரி : மலைப்பாதையில் அரசுப் பேருந்மைத வழிமறித்த காட்டு யானை பேருந்தின் கண்ணாடியை உடைத் வீடியோ வெளியாகியுள்ளது.

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை மேல்தட்டுப்பள்ளம் என்ற இடத்தில் சென்ற போது காட்டுயானை பேருந்தை வழிமறித்தது.

அப்போது அரசு பேருந்தை ஒட்டுநர் பின்னோக்கி இயக்கியதால் துரத்தி வந்த யானை பேருந்து கண்ணாடியை உடைத்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியது. பின்னர் யானை பேருந்தை நோக்கி முன்னேறி வந்த போது ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டார்.

இதனை பேருந்தில் இருந்த பயணி வீடியோ பதிவு செய்த நிலையில் ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்தினார். இதையடுத்து சிறிது நேரத்திற்கு பின் யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)