விமான நிலையத்தில் கொரியர் மூலம் போதைப்பொருள் அனுப்ப முயன்ற வாலிபர் கைது…

 


திருச்சி: திருச்சியில் கொரியர் மூலம் 1கோடி மதிப்புள்ள போதைப்பொருளை அனுப்ப முயன்ற வாலிபரை அதிகாரிகள் கைது செய்து, வீட்டில் சோதனை நடத்தினர்.

திருச்சியில் இருந்து விமானம் மூலம் பல்வேறு வெளிநாடுகளுக்கு பொருட்களோடு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதே போல் கொரியர் மூலம் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு கொரியர் மூலம் போதைப் பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டிற்கு கொரியர் மூலம் பொருட்கள் அனுப்பும் நபர்களை கண்காணித்து வந்தனர். அப்போது கொரியர் அனுப்ப வந்த நபரிடம் இருந்த பார்சலை சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர், சுமார் 10 கிலோ எடைகொண்ட கொரியர் மூலம் போதைப் பொருட்கள் வெளிநாட்டுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.

அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம், எட்டரை கோப்பு பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (32) என்பதும் கொரியர் மூலம் போதை பொருள் கடத்த முயன்றதும் தெரியவந்தது. தொடர்ந்து அதிகாரி அவரை கைது செய்து எட்டரை கோப்பில் உள்ள அவரது வீட்டிற்கும் சென்று சோதனை நடத்தினர்.பிடிப்படிப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதனைத் தொடர்ந்து நந்தகுமாரை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)