பிரச்சாரத்தின் போது பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளுக்கு கட்டுப்பாடு : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..!!


 உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, வேலூர்‌, ராணிபேட்டை, திருப்பத்தூர்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும்‌ தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில்‌ நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித்‌ தேர்தல்‌ நியாயமாகவும்‌, சுதந்திரமாகவும்‌ நடைபெற்றிடவும்‌, தேர்தல்‌ நடத்தை விதிகளின்படி தேர்தல்‌ காலங்களில்‌ ஒலிபெருக்கிகள்‌ போன்றவற்றை பொதுமக்கஞக்கு இடையூறு இல்லாமல்‌ பயன்படுத்தவும்‌, முறைப்படுத்தவும்‌ பின்வரும்‌ கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாரு மாநில தேர்தல்‌ ஆணையம்‌ ஆணைகள்‌ வெளியிட்டுள்ளது.

4 தேர்தல்‌ நாள்‌ அறிலிக்கப்பட்டதிலிருந்து தொடங்கி தேர்தல்‌ நடைபெறும்‌ நாள்‌ வரை, தேர்தல்‌ பிரச்சாரங்ககுக்காக எந்தவொருவகை வாகனங்களிலும்‌ பொருத்தப்பட்டிருக்கும்‌ ஒலிபெருக்கிகளை காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி
வரை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றது.

  • யாதொரு பொதுக்‌ கூட்டங்களுக்கு அல்லது ஊர்வலங்களுக்கு ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டுமாயின்‌ காவல்துறையின்‌ எழுத்து மூலமான முன்‌ அனுமதி பெறவேண்டும்‌.
  • மேலும்‌ ஒலிபெருக்கிகளை பொது அமைதிக்கு இடையூறு ஏற்படாதவாறு அனுமதிக்கப்பட்ட காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்‌.
  • மேற்சொன்னவாறு வரையறுக்கப்பட்ட நேரங்களுக்கு அப்பாலும்‌ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின்‌ எழுத்து மூலமான அனுமதியின்றி பயன்படுத்தப்படும்‌ அனைத்து ஒலிபெருக்கிகளும்‌, அதனைப்‌ பயன்படுத்துவதற்கு தொடர்புடைய அனைத்து கருவிகளுடன்‌ பறிமுதல்‌ செய்யப்படும்‌ எனவும்‌, மேலும்‌ தேர்தல்‌ நடத்தை விதிகளை
    மீறியமைக்கு காவல்துறை மூலம்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.

Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு