பள்ளிகள் திறப்பிற்கு பிறகு 83 மாணவர்களுக்கு கொரோனா : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

 


சென்னை : தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிற்கு பிறகு 83 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- சட்டப்பேரவையில் கல்வித்துறை சார்பில் 28 அறிவிப்புகளை செயல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக முதலமைச்சரிடம் நாளை அறிக்கை சமர்பிக்க உள்ளோம். மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும் என்று யாரும் கூறவில்லை.

கோவை மாவட்டத்தில்தான் குறைவான மாணவர்களே பள்ளிக்கு வருகின்றனர். அதிகபட்சமாக, கன்னியாகுமரியில் 87% பேர் பள்ளிக்கு வருகின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு இதுவரையில் 83 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, எனக் கூறினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு