அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் கைதிகள் விடுதலை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

 


செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரின் இறுதி நாளான இன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த அறிவிப்புகளில் ஒன்றாக அண்ணா பிறந்தநாளில் 700 ஆயுள் தண்டனை சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என அறிவித்துள்ளார்.

செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் கொண்டாடப்படுவதையடுத்து, அன்று 700 ஆயுள் தண்டனை சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா