சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு

 


3 வயது சிறுவனை கடத்திச் சென்ற வடமாநில இளைஞர்களை, புகார் அளித்த 24 மணி நேரத்திலேயே காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

 
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த மித்லிஷ் குமார், துர்கா தேவி தம்பதிக்கு 5 வயதில் விஷ்ணு என்ற மகனும், ஷியாம் என்ற 3 வயது மகனும் உள்ளனர். நேற்று பணியில் இருந்து வீடு திரும்பிய துர்கா, 3 வயது மகன் ஷியாம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர்கள் வீட்டின் மாடியில் குடியிருந்துவந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிவக்குமார், மோனு ஆகியோர் குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது.
 
இதுகுறித்த புகாரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர்கள் குழந்தையை கடத்திச் சென்றதை கண்டுபிடித்தனர். இதுகுறித்து நாக்பூர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விசாரணை நடத்திய தனிப்படையினர் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர். நாக்பூர் விரைந்துள்ள தமிழ்நாடு காவல் துறையினர் குழந்தையை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)