ரயில் நிலையத்தில் பகல் கொள்ளை: 21 மணி நேர பார்க்கிங் கட்டணம் ரூ.500…இணையத்தில் வைரலாகும் பில் டோக்கன்!!

 


மதுரை: மதுரை ரயில் நிலைய பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட கார் ஒன்றுக்கு 21 மணி நேர பார்க்கிங் கட்டணம் ரூ.500 வசூல் செய்யப்பட்டது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் தமிழகத்தின் நுழைவாயிலாக உள்ள மதுரையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ரயில் நிலையத்தில் உள்ள கார் பார்க்கிங்கில் 21 மணி நேரத்திற்கு 500ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் 3மணி நேரத்திற்கு 30 ரூபாயும், அடுத்த 3 மணி நேரத்திற்கு 50 ரூபாயும், அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திற்கு 75 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 21 மணி நேரம் காரை நிறுத்தி வைத்திருந்த ஒரு ரயில் பயணிக்கு 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த கட்டண சீட்டு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 12 மணி நேரத்திற்கு வாகனங்களை பொறுத்து 10 ரூபாய் முதல் 30 ரூபாய் மட்டுமே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், தற்பொழுது பல மடங்கு கட்டணம் உயர்த்தியுள்ளது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே நிர்வாகம் இதுபோன்ற கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ரயில்நிலைய பார்க்கிங்கில் தேவையின்றி வாகனங்கள் நிறுவத்துவதால் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்த இது போன்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்