தமிழகத்தில் நவ.1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – தமிழக அரசு அறிவிப்பு!!

 


சென்னை: தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் செப். 1 முதல் 9,10,11,12 -ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்றும் அதிக அளவில் பரவவில்லை. எனவே, 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்கலாமா என இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைகளுக்குப் பிறகு நவம்பர்1ம் தேதியிலிருந்து தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே செப்ம்பர் 1- ம் தேதியிலிருந்து 9 முதல் 12- ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்