விவசாயியை தாக்கி நாடகம் நடத்திய விஏஓ உதவியாளர்: நிரந்தர பணி நீக்கம் கோரி கடையடைப்பு போராட்டம்..!!

 


அன்னூர் ஒட்டர்பாளையத்தில் விவசாயியை தாக்கிய கிராம உதவியாளர் முத்துசாமியை நிரந்தர பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி அன்னூரில் விவசாய கூட்டமைப்பு சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கோபுரத்தை சேர்ந்த விவசாயி கோபால்சாமி. நிலப் பிரச்சனை தொடர்பாக ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றபோது கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி, விவசாயியை கடுமையாக தாக்கியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

பின்னர் அவரே விவசாயி காலில் விழுந்து விட்டு தன்னை விவசாய கோபால்சாமி காலில் விழ செய்து விட்டதாகவும், சாதி பெயரை கூறி இழிவு படுத்தியதாகவும் பொய் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் விவசாயி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் முத்துசாமி வேண்டுமென்றே விவசாயி மீது நாடகமாடி குற்றம் சாட்டிய வீடியோ வெளியான நிலையில் கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், விவசாயி கோபால்சாமிக்கு ஆதரவு தெரிவித்து விவசாய சங்கங்கள் இன்று அன்னூரில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.


இதனையடுத்து அன்னூர் முழுவதும் இன்று காலை முதல் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அன்னூர், பொகலூர், குருக்கிலியாபாளையம், கரியாம்பாளையம், கஞ்சம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் கடைகளை அடைத்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் கோபால்சாமி மீது போடப்பட்ட பொய் வழக்குகளை நீக்க வேண்டும் என்றும், கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமியையும், கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியையும் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் அதுவரை போராட்டம் தொடர உள்ளதாக விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)