தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து காவல்துறையினருக்கும் அறிவுரை கூறி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு காவல் நிலையங்களில் தீர்வு கிடைக்காத பட்சத்தில், அதை உயர் அதிகாரிகளிடம் கொண்டு செல்லும்போது சம்பந்தப்பட்ட காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும் சில காவல் துறையினர் அதிகாரத்தில் உச்சத்தில் தாங்களே இருப்பதாகவும், தாங்கள் யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என கருதுவதாகவும் டிஜிபி கருத்து தெரிவித்துள்ளார். இந்த எதிர்மறையான அணுகுமுறை காரணமாக சில காவல்துறையினர் புகார் அளிக்க வரும் பொதுமக்களை நேரடியாகவே வசைபாடும் சூழ்நிலையும் இருந்து வருவதாக தெரிவித்துள்ள அவர், இது இது பொதுமக்கள் மனதில் காவல்துறை மீதான நம்பிக்கையை குறைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், எந்தவொரு துறையிலும் சரியான அணுகுமுறை இருந்தால் மட்டுமே ஒரு அதிகாரியால் தங்கள் இலக்குகளை தொழிலிலும், வாழ்க்கையிலும் அடைய முடியும் என தெரிவித்துள்ள டிஜிபி, எந்தவொரு பதவியும் அதிகாரத்திற்கானதல்ல எனவும் மக்களுக்கான சேவையாற்ற