படிக்காமல் ஏன் பார்வேர்டு செய்தீர்கள்? ; எஸ்.வி.சேகரிடம் நீதிபதி கேட்ட சரமாரி கேள்விகள் !

 படிக்காமல் ஏன் பார்வேர்டு செய்தீர்கள்? அவ்வாறு பார்வேர்டு செய்துவிட்டு, மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா? - மதுரைக்கிளை எஸ்.வி.சேகருக்கு கேள்வி.


பெண் செய்தியாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான கருத்தை நடிகரும், பி.ஜே.பி  பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த 2018-ஆம் ஆண்டு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் மனு அளித்திருந்தனர். அதனடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 3 பிரிவுகள் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச்சட்டத்தின் ஒரு பிரிவு என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தனக்கெதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி நிஷாபானு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.வி.சேகர் தரப்பில்," அந்த பதிவை படிக்காமல் பார்வேர்ட் செய்துவிட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும்" தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி," படிக்காமல் ஏன் பார்வேர்ட் செய்தீர்கள்? அவ்வாறு பார்வேர்ட் செய்துவிட்டு, மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா? என கேள்வி எழுப்பினார்.


படிக்காமல் ஏன் பார்வேர்டு செய்தீர்கள்? ; எஸ்.வி.சேகரிடம் நீதிபதி கேட்ட சரமாரி கேள்விகள் !



மனுதாரர் தரப்பில் வழக்கை ரத்து செய்யுமாறு கோரப்பட்டது. அதற்கு வழக்கை ரத்து செய்ய முடியாது என குறிப்பிட்ட நீதிபதி வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)