தமிழ்நாடு பட்ஜெட்டின் முத்தான முக்கிய அறிவிப்புகள்....!

 


  • சட்டமன்ற வரலாற்றில் முதன் முறையாக காகிதமில்லா பட்ஜெட் ஆனது தற்போது தாக்கல் செய்யப்படுகிறது
  • நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய எழுந்தபோது அதிமுகர் உறுப்பினர்கள் பேச வாய்ப்பளிக்க கோரி அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். 
  • இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு - என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசத் தொடங்கினார். 
  • இந்த திருத்திய வரவு செயலவு அறிக்கை இந்த நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு பொருந்தும்.
  • பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது

 

  • அரசின் கடன் சுமையை சரி செய்து நிதிநிலையை மேம்படுத்துவது நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று;  தேர்தல் வக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றப்படும்.
  • பல்வேறு தேசிய அளவிலான நிகழ்வுகளால் தமிழகத்தின் நிதிமேலாண்மை பாதிக்கப்பட்டு இருப்பதை வெள்ளை அறிக்கை நிரூபித்தது; தற்போது அமைக்கப்பட்டுள்ள 15ஆவது நிதிக்கு, சரக்கு மற்றும் சேவை வரி, ஒன்றிய அரசின் அதிகரித்து வரும் மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களின் பயன்பாடு ஆகியவை மாநிலங்களுக்கு உரிய நிதியை திசை திருப்பி விடுகின்றன
  • கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு வழிகளில் மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுவதை வெள்ளை அறிக்கை காட்டி இருக்கிறது
  • பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு கடுமையாக சரிந்துள்ளது, நுகர்வோர்களுக்கு நியாமான பங்கை வழங்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசிடம் உள்ளது
  • கருவூல அமைப்புகளுக்கு வெளியே உள்ள வங்கி கணக்குகளுக்கு அரசின் நிதிகள் அடிக்கடி மாற்றப்படுவதாக பல்வேறு தரவுகள் சுட்டிக்காடுகின்றன; இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு அத்தகைய நிதிகளை கண்டறிய இரட்டை கணக்கெடுப்பு முறை தொடங்கப்பட்டது.
  • அரசு துறைகளிலும், நிறுவனங்களிலும் இந்த நிதியை கண்டறிவதற்கான ஆய்வில் கணிசமான நிதி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது; மேற்கூரிய கணக்குகளை முழுமையாக சரி செய்யவும், பயன்படுத்த முடியாத மற்றும் பயன்படுத்தக்கூடிய நிதியை கண்டறிய நிதித்துறை மூத்த அதிகாரியின் கீழ் சிறப்பு குழு அமைக்கப்படும்; அனைத்து அரசின் நிதியும் கருவூல அமைப்பின் கட்டுப்பாட்டில் வைக்கப்படும்.
  • அனைத்து அரசுத்துறைகளில் உள்ள தணிக்கை துறைகள் அனைத்தும் நிதித்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு மேம்படுத்தப்படும்.
  • பல்வேறு வழிகளில் நாடு முழுவதும் சட்டமன்றங்களின் வலுவான போக்கு பங்கு தற்போது குறைந்துள்ள போக்கு காணப்படுகிறது.
  • சட்டமன்றத்தில் 1921ஆம் ஆண்டில் இருந்து இருக்கும் ஆவணங்கள் கணினி மயமாக்கப்படும்.

 


  • தமிழ்வளர்ச்சி மற்றும் பண்பாடுத்துறை 
  • சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும்
  • 2010 முதல் வழங்கப்படாமல் இருக்கும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது ஆண்டுதோறும் ஜூன் 3ஆம் நாள் ரூபாய் 10 லட்சத்துடன் வழங்கப்படும்
  • அனைத்துதுறைகளிலும் தமிழை ஆட்சி மொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும்; யூனிக்கோடு எழுத்துரு அனைத்து அரசு அலுவலங்களிலும் பயன்படுத்துவது உறுதிப்படுத்தப்படும்.
  • கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க 5 கோடி நிதி ஒதுக்கீடு

  • நீர்வளத்துறை 
  • மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சுப்பாறை உள்ளிட்ட முக்கிய அணைகளில் நீத்தேக்க கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை 
  • ஆனைமலையாறு, நீராறு -நல்லாறு, பாண்டியாறு-புண்ணம்புழா உள்ளிட்ட நதிநீர் திட்டத்தை செயல்படுத்த கேரள மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்
  • ஆளில்லா விமானங்கள், ஜிபிஎஸ், ஜிஐஎஸ் தொழில்நுட்பம் கொண்டு நீர்வளத்துறை மேம்படுத்தப்படும்.
  • மீன்வளம்
  • கடற்பாசி வளர்ப்பு, மீன்வளர்ப்பு, கடற்வாழ் உயிரின வளர்ப்பு உள்ளிட்ட மாற்று வாழ்வாதார திட்டங்கள் ஊக்குவிக்கப்படும்
  • புதியதாக 6 இடங்களில் மீன்பிடித்துறைமுகம் அமைக்கப்படும்
  • சென்னை காசிமேடு துறைமுகம் 160 கோடி செலவில் மேம்படுத்தப்படும்
  • 1149.79 கோடி ரூபாய் மீன்வளத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சுற்றுசூழல் மற்றும் பருவநிலை மாற்றம்
  • தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் 33 சதவீத நிலப்பரப்பை காடுகளாக மாற்ற தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ் நடவடிக்கை 
  • காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்த்து போராடுவது தமிழ்நாடு போன்ற கடலோர மாநிலங்களுக்கு பெரும் சவால்
  • முதல்வரின் தலைமையின் கீழ் 500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் தொடங்கப்படும்
  • சர்வதேச நீலக்கொடி சான்றிதழை பெறுவதற்காக 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்
  • தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும், ஒரு லட்சத்திற்கும் அதிகமாக வசிக்கும் நகரங்களிலும் காற்று தரத்தினை நிகழ்நேரத்தில் கணிக்கும் மையம் அமைக்கப்படும்
  • 150 கோடி செலவில் தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் முதல்வர் தலைமையில் அமைக்கப்படும்.

 

  • பொதுப்பணித்துறை
  • கட்டுமானத்திற்கான திட்டமதிப்பீடு, ஒப்பந்தபுள்ளி, கண்காணிப்பு, பட்டியலிடும் நடைமுறைகள் அனைத்தும் மின்னனுமயமாக்கப்படும்.

 


  • ஊரக வளர்ச்சி
  • 79,395 குக்கிராமங்களிலும் தினமும் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்
  • கிராமப்புறங்களில் 1.27 கோடி குடும்பங்களுக்கு வீட்டுக்குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்
  • தற்போது வீட்டுக்குடிநீர் இணைப்பு இல்லாத 83.92 லட்சம் குடும்பங்களுக்கு 2024 மார்ச் இறுதிக்குள் குடிநீர் இணைப்பு வசதி 
  • 2000 கோடி மதிப்பீட்டில் ஜல்ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும்
  • கிராமங்களில் உள்ள 8 லட்சத்து 3ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு வழங்கப்படும்
  • வீட்டிற்கான அரசுமானியம் 2.76 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • மீண்டும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 
  • சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி 3 கோடி ரூபாயாக உயர்வு
  • 1200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மீண்டும் தொடங்கப்படும்
  • முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டமான நமக்கு நாமே திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டு 100 கோடி நிதி ஒதுக்கீடு.
  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை
  • அனைத்து மாநகராட்சிகளிலும் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர், நகராட்சிகளில் நபருக்கு 90 லிட்டர் பேரூராட்சிகளில் 70 லிட்டர் குடிநீர் வழங்குதல் உறுதி செய்யப்படும்
  • நகர்புறங்களில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நடைமுறை முற்றிலும் தவிர்க்கப்படும்
  • ஒரு லட்சத்திற்கும் அதிக மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம்
  • கழிவுநீர் பராமரிப்பு அனைத்தும் இயந்திரமயமாக்கப்படும்
  • நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள மண் சாலைகளின் தரம் உயர்த்தப்படும்
  • அனைத்து நகரங்களிலும் 30 மீட்டர் இடைவெளியில் மின்விளக்குகள் அமைக்கப்படும்
  • திருச்சியில் நவீன ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் ஏற்படுத்தப்படும்.
  • நகரமயமக்களை சீரமைக்க மதுரை, கோவை, திருப்பூர், ஓசூரில் பெருநகர வளர்ச்சி குழுமம் ஏற்படுத்தப்படும்
  • நகர்புற ஏழைகளுக்கான மொத்த வீட்டு வசதி தேவை 9.53 லட்சம் வீடுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது
  • தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு 3954.4 கோடி ஒதுக்கீடு.
  • நெடுஞ்சாலைத்துறை
  • நாட்டிலேயே அதிக அளவிலான தார்சாலைகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன
  • அடுத்த 10 ஆண்டுகளில் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட தலைமையகத்துடன் இணைக்க கூடிய 2200 கி.மீ சாலைகளை 4 வழி சாலைகளாகவும், வட்ட தலைமையகத்தை இணைக்கும் 6700 கி.மீ சாலைகள் இரட்டை வழி சாலைகளாகம் மேம்படுத்தப்படும்
  • புறவழி சாலை இல்லாத 59 நகராட்சிகளுக்கு புறவழி சாலை அமைக்கப்படும்
  • சென்னை-கன்னியாகுமரி இடையிலான கிராண்ட் ட்ரங்க் சவுத் சாலை மாநில பொருளாதாரத்திற்கான முதுகெலும்பாக உள்ளது.
  • கிராண்ட் ட்ரங்க் சவுத் சாலையை 6 மற்றும் 8 வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்
  • போக்குவரத்துத்துறை
  • அரசுப்பேருந்துகளில் 2010-11இல் 28.36 லட்சமாக இருந்த பயணிகளின் எண்ணிக்கை 2019-20இல் கோவிட் தொற்றுக்கு முன்னரே குறைந்துவிட்டது
  • கோடம்பாக்கம்-பூந்தமல்லி இடையேயேன மெட்ரோ ரயில் பணிகள் 4 ஆண்டுகளுக்குள் தொடங்கும்
  • விமானநிலையம்- கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இடையே மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்படும்
  • மதுரையில் மெட்ரோ ரயில்திட்டத்தை அமைப்பது குறித்து சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.
  • மின்சாரம் மற்றும் எரிசக்தித்துறை 
  • தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறன் 32,646 மெகாவாட்
  • 2500 மெகாவாட் மின்சாரத்தை தனியாரிடம் இருந்தே அரசு வாங்குகிறது
  • தமிழ்நாடு அரசு மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது
  • பள்ளிக்கல்வித்துறை
  • தமிழ்நாட்டுக்கு என தனி மாநில கல்விக்கொள்கை வகுக்கப்படும்
  • 32,599.56 கோடி பள்ளிக்கல்வித்துறைக்காக ஒதுக்கீடு
  • பள்ளிகளில் இடைநின்றலை குறைக்க நடவடிக்கை
  • பள்ளிகளில் 100% மாணவர் சேர்க்கையை நடத்த நடவடிக்கை
  • மலைப்பகுதிகளில் புதிதாக 12 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும்
  • மனப்பாடம் செய்யும் முறையில் இருந்து விலகி சிந்திக்கும் முறையை ஊக்குவிக்க வேண்டும்
  • 2025ஆம் ஆண்டுக்குள் 8 வயதுக்கு உட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் அடிப்படை கல்வி மற்றும் கணித அறிவை உறுதி செய்ய எண்ணும் எழுத்தும் இயக்கம் செயல்படுத்தப்படும்.

 

  • உயர்கல்வித்துறை
  • உயர்கல்வித்துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருந்து வருகிறது
  • இந்தாண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்
  • ஆசிரியர் பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும்
  • வேலை வாய்ப்பை அதிகரிக்க தொழில் நிறுவனங்கள் உடன் ஆலோசித்து பாடத்திட்டங்கள் மறுசீரமைக்கப்படும்
  • 25 கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள்
  • 4 அரசு பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் விடுதிகள் கட்டப்படும்
  • ஆளில்லா விமான கழகம் என்ற புதிய நிறுவனம் அண்ணா பல்கலைக்கழத்துடன் இணைந்து தொடங்கப்படும்
  • உயர்கல்விக்காக 5369.09 கோடி ஒதுக்கீடு.

 

  • மருத்துவம் மற்றும் குடும்ப நலன்
  • 108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 1303ஆக உயர்த்தப்படும்
  • முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்திற்கு 1046 கோடி ஒதுக்கீடு
  • 116.46 கோடியில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் தொடங்கப்படும்
  • 2 கோடியில் தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகம் தொடங்கப்படும்
  • 18,933.20 கோடி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ஒதுக்கீடு.

 

  • தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு
  • அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்திற்கு மானியத்திற்காக 215.64 கோடி 
  • கட்டுமான தொழிலாளர் நலவாரிய செயல்பாடு புதுப்பிக்கப்படும்
  • நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து புதிய தொழில் பயிற்சி நிலையம் நெய்வேலியில் அமைக்கப்படும்
  • திறன்மேம்பாட்டுக்கழகத்தின் மானியமாக 200 கோடி ஒதுக்கீடு

 

  • தொழில்துறை
  • இந்திய அளவில் தொழில்துறையை 3ஆவது இடத்திற்கு கொண்டு வர நடவடிக்கை 
  • உயிரியல் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்திக்கு புதிய தொழிற்கொள்கை வெளியிடப்படும்
  • பின் தங்கிய மாவட்டங்களில் 45ஆயிரம் ஏக்கர் நில வங்கி தொகுப்பு ஏற்படுத்தப்படும்
  • தூத்துக்குடியில் 4500 கோடி முதலீட்டை ஈர்க்க 1100 ஏக்கரில் 1000 கோடியில் அறைகலன்களுக்கான சர்வதேச பூங்கா அமைக்கப்படும்
  • திருவள்ளூரில் மின்வாகன பூங்கா
  • காஞ்சிபுரம் ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா
  • ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தோல் பொருட்கள் உற்பத்தி பூங்கா
  • மணப்பாறை, தேனி, திண்டிவனத்தில் 3 உணவு பூங்காக்கள் அமைக்கப்படும் 
  • நிதிநுட்ப கொள்கை வெளியிடப்படும்
  • நந்தம்பாக்கத்தில் 165 கோடியில் நிதிநுட்ப பூங்கா அமைக்கப்படும்
  • விழுப்புரத்தில் உள்ள திருச்சிற்றம்பலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும்
  • கோவையில் 500 ஏக்கரில் 225 கோடியில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்கா அமைக்கப்படும்
  • திருவண்ணாமலை, தருமபுரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி, நாகை மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்
  • குறு,சிறு,நடுத்தர நிறுவனங்களுக்கு மாநில அளவிலான கடன் உத்தரவாத திட்டம் செயல்படுத்தப்படும்
  • 62 தொழிற்பேட்டைகளில் உள்ள 9,264 மணைகளுக்கு பட்டா வழங்கப்படும்
  • தொழிலாளர்களுக்கு மலிவு  வாடகையில் சென்னை, கோவையில் குடியிருப்பு ஏற்படுத்தப்படும்.

 

  • கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்
  • கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறையில் ஏற்படும் வருவாய் இழப்பை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்
  • பசுமை சுரங்க மேல்வரி விதிக்கப்பட்டும்
  • அரியலூர், பெரம்பலூரில் புதைவியல் புதைபடிவு பூங்கா 10 கோடியில் அமைக்கப்படும்

 

  • கைத்தறி மற்றும் துணிநூல்துறை
  • 2021-22ஆம் ஆண்டில் 490.27 கோடியில் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தபப்டும்
  • இலவச பள்ளி சீருடைகள் வழங்கும் திட்டத்திற்கு 409.30 கோடி ஒதுக்கீடு
  • கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஈரோடு, நாமக்கல்லில் அமைக்கப்படும்
  • திருப்பூர், காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களில் துணிநூல் பூங்கா பணிகள் முடிக்கப்படும்
  • துணிநூல் துறையில் கவனம் செலுத்த தனி இயக்குநரகம் உருவாக்கப்படும்.

 

  • தகவல் தொழில்நுட்பத்துறை
  • டிசம்பருக்குள் 600க்கும் மேற்பட்ட சேவைகள் மின்னணு முறையில் வழங்கப்படும்
  • ஊராட்சி அமைப்புகளுக்கு அகண்ட அலைவரிசை இணைப்பு கொடுக்கப்படும்
  • 12525 கிராமங்களுக்கு கண்ணாடி இழை வடம் மூலம் இணைய சேவை.

 

  • இந்து சமய அறநிலையத்துறை
  • இந்தாண்டில் 100 கோயில்களில் திருத்தேர், திருக்குளம், நந்தவனத்தை சீரமைக்கும் பணிகள் 100 கோடியில் மேற்கொள்ளப்படும்
  • திருக்கோயில்களில் பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்
  • 12959 திருக்கோயில்களில் ஒருகால பூசை திட்டத்தை செயல்படுத்த 130 கோடியில் நிலை நிதி ஏற்படுத்தப்படும்
  • பழனி கோயில் மூலம் புதிய சித்த மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும்
  • பயிற்சி பெற்ற ஓதுவார்கள் மற்றும் அர்ச்சர்களை உருவாக்க அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் ஏற்படுத்தப்படும்.

 

  • சுற்றுலாத்துறை
  • குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை மேம்படுத்தப்படும்
  • மலைவசாத்தளங்களில் சாகச சுற்றுலா ஏற்படுத்தப்படும்
  • சுற்றுலாத்துறைக்கு 187.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • சமூகநலத்துறை
  • 762.23 கோடியில் சமூகநலத்துறையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
  • கைவிடப்பட்ட திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு 1.05 கோடி ஒதுக்கீடு
  • புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மதிய உணவுத்திட்டத்திற்காக 1725.4 கோடி ஒதுக்கீடு
  • ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிக்காக 2536 கோடி ஒதுக்கீடு.

 

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)