நூதன முறையில் மாட்டு வண்டியில் இருசக்கர வாகனத்தை ஏற்றி வந்து தொமுசவினர் ஆர்பாட்டம்
திருப்பூர் இரயில் நிலைய முன்பாக தொமுச சார்பில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அப்பொது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் விதமாக நூதன முறையில் மாட்டு வண்டியில் இருசக்கர வாகனத்தை ஏற்று வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல்,சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து தொமுச பேரவை சார்பில் திருப்பூா் இரயில் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய மோடி அரசிற்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டது.