தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் இரண்டாம் கட்டப் போராட்டத்திற்கு பின்பு மூன்றாம் கட்ட போராட்டம் அறிவிப்பு

 


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கிளையின் சார்பில் 12 அம்சங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி  3 கட்ட போராட்டங்களாக நடைபெற்று வருகிறது, முதல் கட்ட போராட்டம் கடந்த 14-ந் தேதி ராணிபேட்டை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட போராட்டமாக நேற்று மாலை  மாவட்ட செயலாளர் அமர்நாத் தலைமையில் அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த  ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் மணி மற்றும் மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர்  சிறப்புரையாற்றிய போது உதவி ஆட்சியர்  தலைமையில் விசாரணைக் குழு அமைத்து தீர்வு காண  தமிழக அரசையும், ராணிப்பேட்டை மாவட்ட

 ஆட்சியாரையும்  வலியுறுத்தி பேசினர்.மேலும் மூன்றாம் கட்ட போராட்டம் வருகின்ற 31-ஆம் தேதி ராணிபேட்டை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)