சட்டப்பேரவை தோல்விக்கு பிறகு முதன்முறையாக டெல்லிக்கு சென்றிருக்கின்றனர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமியும், இதில் சுவாரஸ்சியம் என்னவென்றால் இருவரும் சேர்ந்து டெல்லி செல்லவில்லை, தனித்தனியாகவே டெல்லி பறந்திருக்கின்றனர்.
நேற்று காலை 10.50 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு தனது மருகன் காசி விஸ்வநாதன் சகிதமாக சென்றார் ஒபிஎஸ். ஒபிஎஸ் டெல்லி சென்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இரவு 9.30 மணிக்கு கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி, இவருடன் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்த தளவாய் சுந்தரம் ஆகியோரும் இணைந்து சென்றனர். ஒபிஎஸ் தன்னந்தனியாக டெல்லி சென்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகளுடன் தனியாக பிரிந்து டெல்லி சென்றுள்ளது அதிமுகவில் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே, அதிமுக-வில் ஒபிஎஸ்-க்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை, எல்லா முடிவுகளையும் எடப்பாடி பழனிசாமியே எடுக்கிறார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், ஒபிஎஸ் டெல்லி சென்றவுடனேயே தனது சகாக்களுடன் எடப்பாடி பழனிசாமியும் விமானம் ஏறியது சர்ச்சைகளுக்கு கச்சைக்கட்டியுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்திக்க, ஒபிஎஸ் - ஈபிஎஸ் நேரம் கேட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இருவரும் சேர்ந்து பிரதமர் மோடியை சந்திக்கின்றார்களா அல்லது தனித்தனியாக சந்திக்கவுள்ளனரா என்ற எதிர்ப்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. பிரதமர் மோடியுடனான சந்திப்பில் ஒற்றைத் தலைமை, உள்ளாட்சித் தேர்தல், சசிகலா விவகாரம், ஒன்றைத் தலைமை, முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை கையில் எடுத்துள்ள திமுக அரசு, உட்கட்சி தேர்தல், மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடம் அளிக்காதது உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்க வாய்ப்பிருக்கிறது.
கூடுதலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு இருமுறை டெல்லி சென்று, குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரை சந்தித்து நீட், மேகதாது அணை விவகாரம், எட்டு வழிச்சாலைத் திட்டம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்திய நிலையில், ஒபிஎஸ் ஈபிஎஸ் இருவரும், இதே நீட், காவிரி விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களுக்கு தீர்வு காணும்படி கோரிக்கை மனுக்களை அதிமுக சார்பில் அளிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது
அதேபோல், நாடாளுமன்ற எம்.பிக்களுக்கு டெல்லியில் வீடு ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக வீடுகள் தரப்படாமல் இருந்தது, இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்கி வந்தனர். இந்நிலையில், தற்போது அவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஒபிஎஸ் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்துக்கும் புதிதாக டெல்லி நிர்மண் பவனில் உள்ள மீனா பவனில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் இன்று பால் காய்ச்சும் நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், இதிலும் ஒபிஸ் பங்கேற்கவுள்ளார்.
இந்தியாவின் ஆணிவேராக கிராமங்களும், கிராம பஞ்சாயத்துகளும் கருதப்படுகிறது. கிராமங்களுக்கு அரசியல் அதிகாரமளித்தல் என்பது மிகவும் தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் அந்த அதிகாரம் ஆபத்தானதாக சென்று கொண்டிருப்பது தான் உள்ளாட்சி அமைப்புகளின் பிரச்சனையாக கருதப்படுகிறது . தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக உள்ளாட்சித்தேர்தல் நடந்து முடிந்து வெற்றி, தோல்வி முடிவுகள் வெளியாகி வருகிறது. இந்திய பிரதமர் ஆனது போல சிலர் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் புகைப்படத்தை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஆரவாரம் செய்வதை காணமுடிகின்றது. ஏன் அவர்களுக்கு இந்த வெற்றி இவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதை பொதுமக்களும், வாக்காளார்களும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சாதாரண கிராம ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு வருவதால் சம்பந்தப்பட்ட நபருக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை எனது இந்த பதிவில் காணலாம். உங்களுக்கு ஒன்று தெரியுமா ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு வரும் நபருக்கு மாதச்சம்பளம் போல சம்பளம் எதுவுமே கிடையாது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.. ஆனால் இது தான் உண்மை . சம்பளமே இல்லாத ஒரு பதவிக்கு ஏன் அவர்கள் இந்த போ...
டிக்டாக்கில் தன்னை காதலிப்பது போல உணர்ச்சி வசப்பட்டு வீடியோக்களை பதிவிட்டு வரும் விபரீதச் செயலை நிறுத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட துணை நடிகையை அறிவுறுத்துங்கள் என்று நகைச்சுவை நடிகர் யோகிபாபு வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழ் திரை உலகில் 18 வருட கடின உழைப்பால் முன்னணி நகைச்சுவை நட்சத்திர அந்தஸ்தை எட்டிப்பிடித்திருப்பவர் நடிகர் யோகிபாபு..! இவரை காதலிப்பது போல நடித்து வீடியோ பதிவிட்டு வந்த துணை நடிகை சுஜி என்பவர் யோகிபாபுவுக்கு திருமணம் ஆன நாள் முதல் காதல் தோல்வி அடைந்தது போல டிக்டாக்கில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு சர்ச்சையை பற்ற வைத்தார் ...! அவரது வீடியோவால் அண்மையில் திருமணம் முடிந்த கையோடு தொடர்ந்து படப்பிடிப்புகளில் பங்கேற்று வரும் நடிகர் யோகிபாபு, குடும்பத்தில் குழப்பம் வந்துவிடக்கூடாது என்று உஷாராகி விசாரித்ததாக கூறப்படுகின்றது. வீடியோ வெளியிட்ட துணை நடிகை தனது தீவிர ரசிகை என்றும் லைக்குகளை குவிக்க காமெடிக்காக இது போன்று செய்து வருவதும் தெரியவந்துள்ளது. இருந்தாலும் அந்த பெண் தொடந்து அழுது கொண்டே வீடியோ வெளியிடுவதால் யோகிபாபு கடும் அதிர்ச்சியில் இருந்துள்ளார். இது தொடர்பாக கோவாவில் படப...
நெல்லை போலீஸ் விசாரணைக்கு வந்தவர்களை ஏஎஸ்பி பல்லை பிடிங்கி சித்தரவதை செய்யப்பட்ட விவகாரத்தில் விகேபுரம் தனிப்பிரிவு காவலர் போகன், கல்லிடைகுறிச்சி தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் ஆயுதப டைக்கு மாற்றம் செயது நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை மீது அதிருப்தியில் உள்ள சமூக ஆர்வலர்கள் அரசை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர். எத்தனையோ பாரம்பரிய வரலாறு கொண்ட மாவட்டங்களில் நெல்லையும் ஒன்று. அதே சமயம் குற்ற சம்பவங்களில் பதட்டமான மாவட்டமும்கூட. இந்நிலையில், இங்கு சட்ட ஒழுங்கை பேணி காப்பதில் காவல்துறைக்கு மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் உள்ளது. அவ்வாறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தாமல் ஒரு தனி தண்டனை சாம்ராஜ்யத்தை உருவாக்கி கைதிகளின் பற்களை பிடுங்கியதாக ஏஎஸ்பி பல்வீர் சிங்க் மீது குரூர குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. இவரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்தபோதே அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக பார்க்கப்பட்டது. இப்போது விசாரணை நடந்து வரும் நிலையில் முக்கிய சாட்சியான சூர்யா கீழே விழுந்து பல் உடைந்ததாக மீடியா முன்பு கூறி பரபரப்பை கிளப்...