’ஒபிஎஸ்- ஈபிஎஸ் தனித்தனியாக டெல்லி பயணம்’ பிரதமருடனும் தனித்தனியாக சந்திப்பா..?

 


சட்டப்பேரவை தோல்விக்கு பிறகு முதன்முறையாக டெல்லிக்கு சென்றிருக்கின்றனர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமியும், இதில் சுவாரஸ்சியம் என்னவென்றால் இருவரும் சேர்ந்து டெல்லி செல்லவில்லை, தனித்தனியாகவே டெல்லி பறந்திருக்கின்றனர்.

’ஒபிஎஸ்- ஈபிஎஸ் தனித்தனியாக டெல்லி பயணம்’ பிரதமருடனும் தனித்தனியாக சந்திப்பா..?


நேற்று காலை 10.50 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு தனது மருகன் காசி விஸ்வநாதன் சகிதமாக சென்றார் ஒபிஎஸ். ஒபிஎஸ் டெல்லி சென்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இரவு 9.30 மணிக்கு கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி, இவருடன் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்த தளவாய் சுந்தரம் ஆகியோரும் இணைந்து சென்றனர். ஒபிஎஸ் தன்னந்தனியாக டெல்லி சென்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகளுடன் தனியாக பிரிந்து டெல்லி சென்றுள்ளது அதிமுகவில் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே, அதிமுக-வில் ஒபிஎஸ்-க்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை, எல்லா முடிவுகளையும் எடப்பாடி பழனிசாமியே எடுக்கிறார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், ஒபிஎஸ் டெல்லி சென்றவுடனேயே தனது சகாக்களுடன் எடப்பாடி பழனிசாமியும் விமானம் ஏறியது சர்ச்சைகளுக்கு கச்சைக்கட்டியுள்ளது.

பிரதமர் நரேந்திரமோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்திக்க, ஒபிஎஸ் - ஈபிஎஸ் நேரம் கேட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இருவரும் சேர்ந்து பிரதமர் மோடியை சந்திக்கின்றார்களா அல்லது தனித்தனியாக சந்திக்கவுள்ளனரா என்ற எதிர்ப்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. பிரதமர் மோடியுடனான சந்திப்பில் ஒற்றைத் தலைமை, உள்ளாட்சித் தேர்தல், சசிகலா விவகாரம், ஒன்றைத் தலைமை, முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை கையில் எடுத்துள்ள திமுக அரசு, உட்கட்சி தேர்தல், மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடம் அளிக்காதது உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்க வாய்ப்பிருக்கிறது.
கூடுதலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு இருமுறை டெல்லி சென்று, குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரை சந்தித்து நீட், மேகதாது அணை விவகாரம், எட்டு வழிச்சாலைத் திட்டம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்திய நிலையில், ஒபிஎஸ் ஈபிஎஸ் இருவரும், இதே நீட், காவிரி விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களுக்கு தீர்வு காணும்படி கோரிக்கை மனுக்களை அதிமுக சார்பில் அளிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது
அதேபோல், நாடாளுமன்ற எம்.பிக்களுக்கு டெல்லியில் வீடு ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக வீடுகள் தரப்படாமல் இருந்தது, இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்கி வந்தனர். இந்நிலையில், தற்போது அவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஒபிஎஸ் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்துக்கும் புதிதாக டெல்லி நிர்மண் பவனில் உள்ள மீனா பவனில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் இன்று பால் காய்ச்சும் நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், இதிலும் ஒபிஸ் பங்கேற்கவுள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)