சட்டப்பேரவை தோல்விக்கு பிறகு முதன்முறையாக டெல்லிக்கு சென்றிருக்கின்றனர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமியும், இதில் சுவாரஸ்சியம் என்னவென்றால் இருவரும் சேர்ந்து டெல்லி செல்லவில்லை, தனித்தனியாகவே டெல்லி பறந்திருக்கின்றனர்.
நேற்று காலை 10.50 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு தனது மருகன் காசி விஸ்வநாதன் சகிதமாக சென்றார் ஒபிஎஸ். ஒபிஎஸ் டெல்லி சென்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இரவு 9.30 மணிக்கு கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி, இவருடன் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்த தளவாய் சுந்தரம் ஆகியோரும் இணைந்து சென்றனர். ஒபிஎஸ் தன்னந்தனியாக டெல்லி சென்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகளுடன் தனியாக பிரிந்து டெல்லி சென்றுள்ளது அதிமுகவில் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே, அதிமுக-வில் ஒபிஎஸ்-க்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை, எல்லா முடிவுகளையும் எடப்பாடி பழனிசாமியே எடுக்கிறார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், ஒபிஎஸ் டெல்லி சென்றவுடனேயே தனது சகாக்களுடன் எடப்பாடி பழனிசாமியும் விமானம் ஏறியது சர்ச்சைகளுக்கு கச்சைக்கட்டியுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்திக்க, ஒபிஎஸ் - ஈபிஎஸ் நேரம் கேட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இருவரும் சேர்ந்து பிரதமர் மோடியை சந்திக்கின்றார்களா அல்லது தனித்தனியாக சந்திக்கவுள்ளனரா என்ற எதிர்ப்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. பிரதமர் மோடியுடனான சந்திப்பில் ஒற்றைத் தலைமை, உள்ளாட்சித் தேர்தல், சசிகலா விவகாரம், ஒன்றைத் தலைமை, முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை கையில் எடுத்துள்ள திமுக அரசு, உட்கட்சி தேர்தல், மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடம் அளிக்காதது உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்க வாய்ப்பிருக்கிறது.
கூடுதலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு இருமுறை டெல்லி சென்று, குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரை சந்தித்து நீட், மேகதாது அணை விவகாரம், எட்டு வழிச்சாலைத் திட்டம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்திய நிலையில், ஒபிஎஸ் ஈபிஎஸ் இருவரும், இதே நீட், காவிரி விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களுக்கு தீர்வு காணும்படி கோரிக்கை மனுக்களை அதிமுக சார்பில் அளிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது
அதேபோல், நாடாளுமன்ற எம்.பிக்களுக்கு டெல்லியில் வீடு ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக வீடுகள் தரப்படாமல் இருந்தது, இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்கி வந்தனர். இந்நிலையில், தற்போது அவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஒபிஎஸ் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்துக்கும் புதிதாக டெல்லி நிர்மண் பவனில் உள்ள மீனா பவனில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் இன்று பால் காய்ச்சும் நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், இதிலும் ஒபிஸ் பங்கேற்கவுள்ளார்.
இந்தியாவின் ஆணிவேராக கிராமங்களும், கிராம பஞ்சாயத்துகளும் கருதப்படுகிறது. கிராமங்களுக்கு அரசியல் அதிகாரமளித்தல் என்பது மிகவும் தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் அந்த அதிகாரம் ஆபத்தானதாக சென்று கொண்டிருப்பது தான் உள்ளாட்சி அமைப்புகளின் பிரச்சனையாக கருதப்படுகிறது . தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக உள்ளாட்சித்தேர்தல் நடந்து முடிந்து வெற்றி, தோல்வி முடிவுகள் வெளியாகி வருகிறது. இந்திய பிரதமர் ஆனது போல சிலர் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் புகைப்படத்தை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஆரவாரம் செய்வதை காணமுடிகின்றது. ஏன் அவர்களுக்கு இந்த வெற்றி இவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதை பொதுமக்களும், வாக்காளார்களும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சாதாரண கிராம ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு வருவதால் சம்பந்தப்பட்ட நபருக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை எனது இந்த பதிவில் காணலாம். உங்களுக்கு ஒன்று தெரியுமா ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு வரும் நபருக்கு மாதச்சம்பளம் போல சம்பளம் எதுவுமே கிடையாது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.. ஆனால் இது தான் உண்மை . சம்பளமே இல்லாத ஒரு பதவிக்கு ஏன் அவர்கள் இந்த போ
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,தற்போது செல்போன் மூலம் வங்கி பண பரிமாற்றம், முன்பதிவு ரயில் டிக்கெட்டுகள் பதிவு செய்வது போன்ற பல்வேறு பணிகள் விரைவாகவும், எளிதாகவும் நடைபெற்று வருகிறது. முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளையும் செல்போன் மூலம் பதிவு செய்யும் வசதி ஏற்கனவே நடப்பில் உள்ளது. இருந்தாலும் செல்போன் வைத்திருக்கும் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்த ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள். இந்த வசதியை பயன்படுத்தினால் நீண்ட நேரம் பயணச்சீட்டு பதிவு மையங்கள் முன் காத்திருக்க வேண்டியதில்லை. உரிய நேரத்தில் ரயில்களில் ஏறி பயணம் செய்யலாம். பெரும்பாலும் முன்பதிவில்லாத பயணிகள் பயணச்சீட்டுகள் பெற கடைசி நேரத்தில் வரும் சூழல் உள்ளது. எனவே இருக்கின்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கால நேர விரயத்தை தவிர்க்கலாம். செல்போனில் உள்ள ப்ளே ஸ்டோரில் யூடிஎஸ் ஆப் என்ற செயலியை எளிதாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்பு அதில் செல்போன் எண், பெயர், பாஸ்வேர்டு, பாலினம், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். அதை சமர்ப்பிக்கும் போது நமது தகவல்களை சரிபார்க்க ஒரு ஓடிபி வரும். அதையும் செல்போ
பெண் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் சரமாரியாக வெட்டிய நபர் கைது செய்யப்பட்டார்.அபராதம் விதித்த ஆத்திரத்தில், நெல்லை சுத்தமல்லி அருகே கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் சரமாரியாக வெட்டிய நபர் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் மார்க்ரெட் திரேஷா. இவர் நேற்றிரவு சுத்தமல்லி அடுத்த பழவூரில் கோயில் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் திடீரென உதவி ஆய்வாளர் மார்க்ரெட் திரேஷாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்இதில் உதவி ஆய்வாளருக்கு இடது கன்னம் இடது கழுத்து மற்றும் வலது மார்பு ஆகிய பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக சக போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். நெல்லையில் கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி பெண் ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சில தினங்களுக்கு முன்பு வாகன தணிக்கையில் உதவி ஆய்வாளர் மா