சட்டப்பேரவை தோல்விக்கு பிறகு முதன்முறையாக டெல்லிக்கு சென்றிருக்கின்றனர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமியும், இதில் சுவாரஸ்சியம் என்னவென்றால் இருவரும் சேர்ந்து டெல்லி செல்லவில்லை, தனித்தனியாகவே டெல்லி பறந்திருக்கின்றனர்.
நேற்று காலை 10.50 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு தனது மருகன் காசி விஸ்வநாதன் சகிதமாக சென்றார் ஒபிஎஸ். ஒபிஎஸ் டெல்லி சென்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இரவு 9.30 மணிக்கு கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி, இவருடன் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்த தளவாய் சுந்தரம் ஆகியோரும் இணைந்து சென்றனர். ஒபிஎஸ் தன்னந்தனியாக டெல்லி சென்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகளுடன் தனியாக பிரிந்து டெல்லி சென்றுள்ளது அதிமுகவில் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே, அதிமுக-வில் ஒபிஎஸ்-க்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை, எல்லா முடிவுகளையும் எடப்பாடி பழனிசாமியே எடுக்கிறார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், ஒபிஎஸ் டெல்லி சென்றவுடனேயே தனது சகாக்களுடன் எடப்பாடி பழனிசாமியும் விமானம் ஏறியது சர்ச்சைகளுக்கு கச்சைக்கட்டியுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்திக்க, ஒபிஎஸ் - ஈபிஎஸ் நேரம் கேட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இருவரும் சேர்ந்து பிரதமர் மோடியை சந்திக்கின்றார்களா அல்லது தனித்தனியாக சந்திக்கவுள்ளனரா என்ற எதிர்ப்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. பிரதமர் மோடியுடனான சந்திப்பில் ஒற்றைத் தலைமை, உள்ளாட்சித் தேர்தல், சசிகலா விவகாரம், ஒன்றைத் தலைமை, முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை கையில் எடுத்துள்ள திமுக அரசு, உட்கட்சி தேர்தல், மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடம் அளிக்காதது உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்க வாய்ப்பிருக்கிறது.
கூடுதலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு இருமுறை டெல்லி சென்று, குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரை சந்தித்து நீட், மேகதாது அணை விவகாரம், எட்டு வழிச்சாலைத் திட்டம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்திய நிலையில், ஒபிஎஸ் ஈபிஎஸ் இருவரும், இதே நீட், காவிரி விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களுக்கு தீர்வு காணும்படி கோரிக்கை மனுக்களை அதிமுக சார்பில் அளிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது
அதேபோல், நாடாளுமன்ற எம்.பிக்களுக்கு டெல்லியில் வீடு ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக வீடுகள் தரப்படாமல் இருந்தது, இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்கி வந்தனர். இந்நிலையில், தற்போது அவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஒபிஎஸ் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்துக்கும் புதிதாக டெல்லி நிர்மண் பவனில் உள்ள மீனா பவனில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் இன்று பால் காய்ச்சும் நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், இதிலும் ஒபிஸ் பங்கேற்கவுள்ளார்.
இந்தியாவின் ஆணிவேராக கிராமங்களும், கிராம பஞ்சாயத்துகளும் கருதப்படுகிறது. கிராமங்களுக்கு அரசியல் அதிகாரமளித்தல் என்பது மிகவும் தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் அந்த அதிகாரம் ஆபத்தானதாக சென்று கொண்டிருப்பது தான் உள்ளாட்சி அமைப்புகளின் பிரச்சனையாக கருதப்படுகிறது . தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக உள்ளாட்சித்தேர்தல் நடந்து முடிந்து வெற்றி, தோல்வி முடிவுகள் வெளியாகி வருகிறது. இந்திய பிரதமர் ஆனது போல சிலர் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் புகைப்படத்தை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஆரவாரம் செய்வதை காணமுடிகின்றது. ஏன் அவர்களுக்கு இந்த வெற்றி இவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதை பொதுமக்களும், வாக்காளார்களும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சாதாரண கிராம ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு வருவதால் சம்பந்தப்பட்ட நபருக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை எனது இந்த பதிவில் காணலாம். உங்களுக்கு ஒன்று தெரியுமா ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு வரும் நபருக்கு மாதச்சம்பளம் போல சம்பளம் எதுவுமே கிடையாது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.. ஆனால் இது தான் உண்மை . சம்பளமே இல்லாத ஒரு பதவிக்கு ஏன் அவர்கள் இந்த போ
அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்வீர் சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீது பதிவுச் செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரத்தில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அதன்படி இந்திய தண்டனைச் சட்டம் 323, 324, 326, 506(பகுதி 1) ஆகிய பிரிவுகளின் கீழ் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.அதில் தங்களை ஆடைகள் இல்லாமல் நிற்க வைத்து ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மற்றும் சக காவலர்கள் கொடுமையாக தாக்கியதாகவும், வலுக்கட்டாயமாக தங்களது பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட சுபாஷ் தெரிவித்துள்ளார். மேலும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு தாங்கள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காவல்துறையினர், வழக்கறிஞர்களுடன் பாபநாசம் கொண்டு செல்லப்பட்டதாகவும்
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள மனித உரிமை ஆணைய அலுவல கம் அமைந்துள்ளது. இதில் தலைவராக பாஸ்கரன் உறுப்பினர்களாக துரை ஜெயசந்திரன், சித்தரஞ்சன் மோகன்ராஜ் ஆகியோர் ஆணையத்தின் உறுப்பி னர்களாக உள்ளனர்.தமிழ கத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் சம்பந்த மாக வரும் புகார்கள் மற் றும் பத்திரிகைகளில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக வரும் செய்திகளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக கடந்த 5 ஆண்டுகள் பணி நிறைவடைந்த நிலையில் நேற்று துரை ஜெயசந்திரன் அவர் ஓய்வு பெற்றார். அவருக்கு மனித உரிமை ஆணையத்தின் தலைவர். உறுப்பினர்கள். பதிவாளர், ஊழியர்கள் அவருக்கு பாராட்டி வழி யனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து துரை ஜெயசந்திரன் கூறி யதாவது, கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதிமனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக பதவி யேற்று நேற்றுடன் 5 வருடங்கள் நிறைவ டைந்து பணி ஓய்வு பெறுகிறேன். இந்த 5 ஆண்டுகளில் ஆணையத்தின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து மாநிலம் முழுவதும் உள்ள மக்களிடம் சிறப்பான முறையில் கொண்டு சென்ற பத்திரிகைகளுக்கு நன்றி தெரி