ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியினை அதிமுக துணை கொறடா சு. ரவி எம் எல் ஏ துவக்கி வைத்தார்
அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியினை அதிமுக துணை கொறடா சு. ரவி எம் எல் ஏ துவக்கி வைத்தார்
அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை பகுதியில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியினை நேற்று அதிமுக துணை கொறடாவும் ராணிபேட்டை மாவட்ட செயலாளருமான சு. ரவி எம் எல் ஏ துவக்கி வைத்தார். மருத்துவ வல்லுநர்கள் கொரோனா மூன்றாம் அலை குறித்து எச்சரித்து வரும் நிலையில் அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா மூன்றாம் அலையினை தடுக்கும் வகையில் நேற்று அனைத்து கிராம பகுதிகளிலும் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை அதிமுக துணை கொறடா சு.ரவி துவக்கி வைத்தார். அப்போது அரக்கோணம் பி டி ஓ ஜோசப் கென்னடி, அரக்கோணம் ஒன்றிய செயலாளர்கள் பழனி, பிரகாஷ், நெமிலி ஒன்றிய செயலாளர் ஏ ஜி விஜயன் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.