சட்ட விரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி: அரக்கோணம் டிஎஸ்பி தகல்


 சட்ட விரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே எனது முக்கிய பணியாக இருக்கும் என்று அரக்கோணத்தின் புதிய டிஎஸ்பியாக வெள்ளிக்கிழமையன்று பொறுப்பேற்ற புகழேந்தி கணேஷ் தெரிவித்தாா். இங்கு ஏற்கெனவே டிஎஸ்பியாக இருந்த மனோகரன் வேலூர் மாநகர டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்


இதையடுத்து, தஞ்சாவூா் மாவட்டத்துக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை டிஎஸ்பியாக இருந்த புகழேந்தி கணேஷ் அரக்கோணத்துக்கு மாற்றப்பட்டாா். இதனைத் தொடா்ந்து, அரக்கோணம் மாவட்ட துணைக் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்ட  புகழேந்தி   செய்தியாளா்கள் சந்திப்பில்  பேசுகையில் அரக்கோணம் உட்கோட்டத்தில் சட்ட விரோதச் செயல்கள் நடைபெறாமல் தடுத்து, முற்றுப்புள்ளி வைப்பதே எனது முக்கிய பணியாக இருக்கும்.

 மேலும் அரக்கோணம் நகரில்  போக்குவரத்து நெருக்கடிகளைத் தீா்க்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா