முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு பிரஸ் & மீடியோ ரிப்போட்டர்ஸ் யூனியன்,(3579/CNI)சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

 


பத்திரிகையாளர்கள் மீதான அவதூறு வழக்குகள் வாபஸ்.தமிழ்நாடு பிரஸ் & மீடியோ ரிப்போட்டர்ஸ் யூனியன்(3579/CNI), சார்பாக தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

திமுக அரசு பொறுப்பேற்ற உடன், பத்திரிகையாளர்களும் முன்களப் பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்று முதல்  அறிவிப்பை வெளியிட்டது. அத்துடன், கொரோனா  தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகையாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

அதேபோல் கொரோனா பெருந்தொற்று காலத்தில் களத்தில் நின்று பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

அந்த வரிசையில், கடந்த ஆட்சியில் பழிவாங்கும் நோக்கத்தோடும், கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையிலும், பத்திரிகையாளர்களுக்க எதிராக தொடரப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் இன்று (29.07.21), செய்தி வெளியிட்டதற்காகவும், பேட்டியளித்ததற்காகவும், பல்வேறு செய்தித்தாள், வார இதழ் மற்றும் தொலைகாட்சிகளை சேர்ந்த செய்தி ஆசிரியர், வெளியீட்டாளர், அச்சிட்டவர் மற்றும் பேட்டியளித்தவர்கள் என 90 பேர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்ப பெற தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சரின் இந்த நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையிலும், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீது தற்போது நடைபெற்று வரும் பல்வேறு தாக்குலுக்கு மத்தியில், தமிழ் நாடு அரசின் இந்த நம்பிக்கையளிக்கும் நடவடிக்கை, தமிழகத்தின் பத்திரிகையாளர்களுக்கு புதிய உட்சாகத்தை அளிக்கும் என்று கூறினால் அது மிகையாகது.

ஆகவே, தமிழகத்தின் கருத்து சுதந்திர பாரம்பரியத்தை நிலைநாட்டும் வகையில், பத்திரிகையாளர்களுக்கு எதிராக பழிவாங்கும் நோக்கிலும், அச்சுறுத்தும் நோக்கிலும் தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு பிரஸ் & மீடியோ ரிப்போட்டர்ஸ் யூனியன்(3579/CNI),சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)