மாவட்டங்களில் E Pass , E Registration அவசியமில்லை! எந்த மாவட்டங்களில் தேவை?

 


தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. இதேபோல வகை 2 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டேக்ஸி, ஆட்டோக்களில் இ-பதிவு பெற்றும், வகை 3 மாவட்டங்களில் இ-பதிவு இல்லாமலும் பயணிகள் பயணம் செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்னர் தளர்வுகளின்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. தொற்று பரவலின் அடிப்படையில் சுகாதார வல்லுநர்களின் பரிந்துரையின் பேரில் சில தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்து வருகிறது.

தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாளை (ஜூன் 21) காலை 6 மணியுடன் நிறைவடைய இருந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கை ஜூன் 28ம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்துள்ளது.

தொற்று பாதிப்பில் அடிப்படையில் 3 வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ‘வகை 3’ என பட்டியலிடப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி வழங்கியிருக்கிறது தமிழக அரசு.

பொதுப்போக்குவரத்து தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணையின்படி, மாவட்டத்திற்குள் பொது போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி குளிர் சாதன வசதி உல்லாமலும் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் போக்குவரத்து 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி குளிர் சாதன வசதி இல்லாமலும் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்..

இந்த 4 மாவட்டங்களில் மட்டும் வாடகை வாகனங்கள், டேக்ஸிகள், ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர். டேக்ஸிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது..

இ பாஸ் (E PASS) அவசியம்

இதே போல திருமண நிகழ்வுகளுக்கு வகை 2 மற்றும் 3-ல் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதிக்கப்படும். இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெற்ற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணையவழியாக https://eregister.tnega.org) விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

கொடைக்கானல், நீலகிரி, ஏற்காடு, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.

இ - பதிவு (E REGISTRATION) தேவைப்படும் மாவட்டங்கள்

இதே போல வகை 2 என வகைப்படுத்தப்பட்டிருக்கும் 23 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டேக்ஸிக்கள் மற்றும் ஆட்டோக்களில் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவர். டேக்ஸிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்