தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது இதில் தொழிலாளர் மற்றும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்த வேண்டும் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களையும் அரசுத் துறைகளையும் தனியார்மையமாக்கும் கொள்கையை கைவிட வேண்டுமென்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.