பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்

 




பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை விற்றதாக எழுந்த புகாரையடுத்து சிறுகனூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றித்திரிபவர்கள் மீது ரூ.200 அபராதம் விதித்தும், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

அதன்படி திருச்சி மாவட்டம் சிறுகனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவர்களை சிறுகனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி கைது செய்து, 1,700-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார். ஆனால் பறிமுதல் செய்த மது பாட்டில்களின் எண்ணிக்கையை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமலும், போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை வெளியே கொண்டுவந்து தனி நபர் மூலம் ரூ. 2 லட்சத்திற்கு மேல் விற்பனை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐஜி, பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பால்வண்ணநாதன் சிறுகனூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து அங்கு பணியாற்றி வரும் போலீசாரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் குற்றச்சாட்டுகள் உறுதியானதால், இன்ஸ்பெக்டர் சுமதி, ஏட்டு ராஜா ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்