எங்கு சென்றாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்” - ஜெயக்குமார் கேள்விக்கு சுகாதார அமைச்சர் பதிலடி!

 


மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் லலிதா, திமுக நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் பூம்புகார் தொகுதி எம்எல்ஏவான நிவேதா முருகன், எம்எல்ஏக்கள் ராஜகுமார், பன்னீர்செல்வம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, புதிதாக அமைக்கப்பட்ட 6 கேஎல் கொண்ட ஆக்சிஜன் பிளான்ட் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்த அமைச்சர் மா் சுப்பிரமணியன் கொரோனா வார்டில் நோயாளிகளிடம் சிகிச்சை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது

மூன்றாவது அலை ஏற்பட்டால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு மையம் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டதன் பேரில் தற்போது மயிலாடுதுறையில் குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு மையம் 6 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவில் 40 படுக்கைகள் உள்ள மையம் திறக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக மற்ற மாவட்டங்களில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதுகலை மருத்துவர்கள் கொரோனா தாக்கம் குறைந்ததால் தேவைப்படும் இடங்கள் மற்றும் காலி பணி இடங்களுக்கு நியமிக்கப்பட்டு வருகிறார்கள். மாவட்டங்களுக்கு தேவையான மருத்துவர்களை மருத்துவக் கல்லூரி முதல்வர், மாவட்ட ஆட்சியர்கள் நேரடி நியமனம் செய்து வருகிறார்கள்.

தடுப்பூசி ஒரு கோடியே 16 லட்சம் தமிழகத்திற்கு வந்துள்ளது. 1 கோடியே 6 லட்சம் வரை பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 6 லட்சத்து 20 ஆயிரம் கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில் 18 வயதைக் கடந்தவர்களுக்கான 2 டோஸ் தடுப்பூசி 11 கோடியை 36 லட்சம் போடப்படவேண்டும். தமிழகத்திற்கு 10.25 கோடி தடுப்பூசி தேவைப்படுகிறது என்றார். தற்போது கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் அறிவிக்கப்படுகிறது.

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்பது முன்னாள் முதல்வர் கலைஞரின் கனவு அந்த அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்றிய அரசு உதவியுடன் மருத்துவ கல்லூரி ஏற்படுத்தப்படும் என்றார். முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எங்கு சென்றாலும் தடுப்பூசி கிடைப்பதில்லை என்ற கேள்விக்கு அவர் எங்கு சென்றாலும் அங்கே தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)