புதுச்சேரியிலும் ATM கொள்ளை: வடமாநில கொள்ளையர்களை பிடிக்க போலிஸார் தீவிர விசாரணை!

 


தமிழ்நாட்டில் ஏ.டி.எம் வைப்பு இயந்திரத்தில், நூதன முறையில் பல லட்சம் மோசடி செய்தது தெரியவந்து தற்போது அந்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 17ம் தேதி இரவு புதுச்சேரி கடலூர் சாலை மணப்பட்டு கிராம சாலையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்மில், முக கவசம் அணிந்த 3 மர்ம நபர்கள், போலி ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பணத்தை திருடி உள்ளனர்.

தொடர்ந்து அதன் வங்கி மேலாளர் சாந்தி, புதுவை கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், ஏ.டி.எம்மில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஏ.டி.எம்மில் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரம் பெரிய வளையத்திற்குள் சென்ற நிலையில், புதுச்சேரியிலும் அந்த நபர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்ற கோணத்தில் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு