தமிழகத்திலுள்ள ஐ.பி.எஸ்.அதிகாரிகள் 49 பேர் மாற்றப்பட்டனர்.


 


அதன்படி 5 பேர் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றனர். சேலம், நெல்லை, திருப்பூருக்கு புதிய போலீஸ் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய கமிஷனர்கள்

சேலம், நெல்லை, திருப்பூருக்கு புதிய போலீஸ் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை நகர போலீசிலும் உயர் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 5 டி.ஐ.ஜி.கள் போலீஸ் ஐ.ஜிக்களாக பதவி உயர்வு பெற்று உள்ளனர். அதுபோல சூப்பிரண்டுகளாக இருந்த சிலர் டி.ஐ.ஜி.க்களாக பதவி ஏற்கிறார்கள்.

மாற்றப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களது பதவி மாற்றம் விவரம் வருமாறு:-

ஐ.ஜி.க்கள் மாற்றம்

* சுமித்சரண்- நலத்துறை ஐ.ஜி.யான இவர், ரெயில்வே போலீஸ் ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

* வனிதா- ரெயில்வே ஐ.ஜி.யான இவர், திருப்பூர் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

* செந்தாமரைக்கண்ணன்- செயலாக்கப் பிரிவு ஐ.ஜி.யான இவர், நெல்லை போலீஸ் கமிஷனராக பதவி ஏற்பார்.

* முருகன்- நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி.யான இவர், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.

* தமிழ்சந்திரன்- ஆயுதப்படை ஐ.ஜி.யான இவர், நிர்வாகப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

* நஜ்முல் ஹோடா- தமிழ்நாடு காகித ஆலை தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக பணியில் இருந்த இவர், சேலம் போலீஸ் கமிஷனராக பதவி ஏற்பார்.

* சந்தோஷ்குமார்- சேலம் போலீஸ் கமிஷனர் பொறுப்பில் இருந்த இவர், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

* தேன்மொழி- சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யாக பதவி வகித்த இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

* கார்த்திகேயன்- திருப்பூர் போலீஸ் கமிஷனராக பதவியில் இருந்த இவர், சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

* ஜோஷி நிர்மல் குமார்- தலைமையக ஐ.ஜி.யாக பதவி வகிக்கும் இவர், சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.

டி.ஐ.ஜி.க்கள் பதவி உயர்வு

* அமீத்குமார் சிங்- இந்திய வெளியுறவுத்துறையில் இயக்குனராக டி.ஐ.ஜி. அந்தஸ்தில் பணியில் இருந்த இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறையில் பணிபுரிவார்.

* அஸ்வின் எம் கோட்னீஸ்- மத்திய அமைச்சரவை செயலகத்தில் இயக்குனராக டி.ஐ.ஜி. அந்தஸ்தில் பணியில் இருந்த இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தொடர்ந்து மத்திய அமைச்சரவை செயலகத்தில் பணியாற்றுவார்.

* பாலகிருஷ்ணன்- சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனராக டி.ஐ.ஜி. அந்தஸ்தில் பணியாற்றிய இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். திருச்சியை தலைமையிடமாக கொண்ட மத்திய மண்டல ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

* பிரதீப்குமார்- சேலம் சரக டி.ஐ.ஜி.யாக பணியில் இருந்த இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக பதவி ஏற்பார்.

* சுதாகர்- மதுரை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். கோவையை தலைமையிடமாக கொண்ட மேற்கு மண்டல ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

* சஞ்சய்குமார்- தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி.யான இவர், நவீனமயமாக்கல் ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.

டி.ஐ.ஜி.க்கள் மாற்றம்

* ஏ.ஜி.பாபு- நிர்வாகப் பிரிவு டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர், வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* பிரவீன்குமார் அபிநபு- நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த இவர், லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, தொடர்ந்து நெல்லை சரக டி.ஐ.ஜி.யாகவே நீடிப்பார்.

* எழில் அரசன்- சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக பணியாற்றிய இவர், ஆயுதப்படை டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

* மகேஸ்வரி- தலைமையக டி.ஐ.ஜி.யாக இருந்த இவர், சேலம் சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.

* ராதிகா- லஞ்ச ஒழிப்பு டி.ஐ.ஜி.யாக பணியில் இருந்த இவர், திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.

* விஜயகுமாரி- கடலோர பாதுகாப்பு குழும டி.ஐ.ஜி.யாக பதவி வகித்த இவர், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

* காமினி- வேலூர் சரக டி.ஐ.ஜி.யான இவர், மதுரை சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* ரூபேஸ்குமார் மீனா- தஞ்சை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.

* ஆனி விஜயா- திருச்சி சரக டி.ஐ.ஜி.யான இவர், நிர்வாகப் பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* சத்யபிரியா- போலீஸ் பயிற்சி பிரிவு டி.ஐ.ஜி.யாக இருந்த இவர், காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

* மல்லிகா- சென்னை தலைமையக இணை கமிஷனராக பணியாற்றும் இவர், தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.

* சாமுண்டீஸ்வரி- காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யான இவர், சென்னை தலைமையக இணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

* முத்துசாமி- திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யான இவர், கோவை சரக டி.ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.

சூப்பிரண்டுகள் பதவி உயர்வு

* சரவணன்- சென்னை சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று தொடர்ந்து சி.பி.ஐ.யில் பணிபுரிவார்.

* சேவியர் தனராஜ்- மத்திய உளவுப்பிரிவு (ஐ.பி.) சூப்பிரண்டாக பணியில் இருந்த இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தொடர்ந்து மத்திய உளவுப்பிரிவில் பணியாற்றுவார்.

* பர்வேஸ்குமார்- தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றார். தஞ்சை சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

* அனில்குமார் கிரி- மத்திய அமைச்சரவை செயலகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து அமைச்சரவை செயலகத்தில் பணியாற்றுவார்.

* பிரபாகரன்- சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவு சூப்பிரண்டாக உள்ள இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றார். சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் எஸ்டாபிளிஸ்மென்ட் பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* கயல்விழி- திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.

* சின்னச்சாமி- நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும சூப்பிரண்டான இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை கடலோர பாதுகாப்பு குழும டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

இணை கமிஷனர் ராஜேந்திரன்

* ராஜேந்திரன்- தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யான இவர், சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

* நரேந்திரன் நாயர்- கோவை சரக டி.ஐ.ஜி.யான இவர், சென்னை தெற்கு இணை கமிஷனராக பதவி ஏற்பார்.

* லலிதா லட்சுமி- சமூக நீதி மற்றும் மனித உரிமை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர், சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

* திஷா மிட்டல்- திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

* சிவபிரசாத்- மதுரை சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக பதவி வகித்த இவர், சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* கார்த்திகேயன்- ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியில் இருந்த இவர், சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

* பிரதீப்- சேரன்மகாதேவி உதவி போலீஸ் சூப்பிரண்டான இவர், சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

* குமார்- சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டான இவர், சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு சூப்பிரண்டு மாற்றம்

* சுந்தரவதனம்- செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர், சென்னை மாதவரம் துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

* தீபா கனிகர்- சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியில் உள்ள இவர், சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

* ராமர்- சென்னை சொத்துரிமை புலனாய்வு பிரிவு சூப்பிரண்டான இவர், நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

* பாலாஜி சரவணன்- புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியில் உள்ள இவர், சென்னை தலைமையக துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

* மகேந்திரன்- சென்னை ஆவடி சிறப்பு காவல்படை கமாண்டராக பணியாற்றும் இவர், சென்னை நிர்வாக பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளதாக தமிழகஅரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!