உடனடி அரசாணை... தயாராகும் பேருந்துகள் : மகிழ்ச்சியில் பெண்கள்!
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் பெருவெற்றிக்குப் பிறகு இன்று முதல்வராகப் பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதி, ஆவின் பால் விலை குறைப்பு, மகளிருக்கு இலவச பேருந்து கட்டணம் உள்ளிட்ட 5 திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.4,000 என்றும் முதல் தவணையாக மே மாதத்திலேயே ரூ.2,000-ஐ குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் நாளை முதல் பயணம் செய்ய வகை செய்யும் கோப்பிலும் கையெழுத்திட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.