காப்பீட்டு திட்டத்தில் சேராதவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக என்ன திட்டம் உள்ளது? - சென்னை உயர் நீதிமன்றம்!

 


முதல்வரின் ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டத்தில் சேராதவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக என்ன திட்டம் உள்ளதென தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாக்கம் குறையும் வரை தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் எடுத்து இலவச சிகிச்சை அளிக்க கோரி கோவையை சேர்ந்த பூமிராஜ் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், முதல்வர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்படுகிறது என்றும், அந்த திட்டத்தில் உறுப்பினரானால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், மற்றவர்கள் அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

சில தனியார் மருத்துவமனைகளில் குறிப்பிட்ட சதவீத படுக்கைகள் இலவசமாக சிகிச்சை வழங்கப்படுகிறது என்றும், முழு விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும், இதுவரை சுமார் 1 கோடியே 58 லட்சம் மக்கள் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அரசு அதிகாரிகள், ஓய்வுபெற்றவர்கள், குழு காப்பீட்டு திட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் அதிகம் சேர்ந்துள்ளதாகவும், இதில் சேராதவர்களும் படுக்கை பெற இயலாதவர்களும், தனியார் மருத்துவமனைகளில் எவ்வாறு சிகிச்சை பெற முடியும் என அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை மே 31ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)