சட்டமன்ற குழு தலைவராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு.. அண்ணா, கலைஞர் நினவிடங்களில் மரியாதை!
நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 159 தொகுதிகளைக் கைப்பற்றி தி.மு.க பெருவெற்றி பெற்றுள்ளது. 125 தொகுதிகளைக் கைப்பற்றிய தி.மு.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் 125 பேரும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் 8 பேரும் தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.