ஊரடங்கை மீறி வெளியேவருபவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து போலீஸார் அறிவுரை

 


மதுரையில் முழு ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய நபர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து நூதன முறையில் போக்குவரத்து காவல்துறையினர் அறிவுரை வழங்கினர். 

கொரானா வைரஸ் தொற்று இரண்டாம் அலை நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் 24 ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அருகில் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றிய நபர்களை பிடித்த போக்குவரத்து காவல்துறையினர் நூதன முறையில் ரோஜா பூ கொடுத்து வெளியே சுற்ற வேண்டாம் எனவும், கொரானா பாதிப்பு குறித்தும் எடுத்துரைத்து வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!