உதவி கரம் நீட்டிய திருச்சி சரக டி.ஐ.ஜி
ஜெயங்கொண்டம் நகரத்தில் செந்துறை சாலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக வெளிமாநிலத்தில் இருந்து வந்து சர்க்கஸ் (SAM) நடத்துவதற்காக வந்தவர்கள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்டு சர்க்கஸ் நடத்தமுடியாமல் உணவின்றி சிரமப்பட்டு கொண்டிருந்தவளுக்கு இன்று உதவிக்கரம் நீட்டும் வகையில் அரிசி,கோதுமை,காய்கறிகள் மற்றும் மளிகை சாமான்கள் ஆகிய பொருட்களை ஜெயங்கொண்டம் கண்ணன் ஜவுளி ஸ்டோர் அவர்களின் உதவியுடன் திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா இ,கா,ப,. அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் முன்னிலையில் மேற்கண்ட பொருட்களை வழங்கினார்
சர்க்கஸ் நடத்தாமல் இருந்ததால் தம்மால் அன்றாட வாழ்க்கையை போல் கடந்து செல்ல முடியவில்லை என்றும் தமக்கு இந்த உணவுப்பொருட்களை வழங்கிய திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர். உடன் காவல் அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் இருந்தனர்.