ஒரே நாளில் 144 பேர் கொரோனாவுக்கு பலி... 21 ஆயிரத்தை கடந்த தினசரி பாதிப்பு!

 


தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,34,141 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 21,228 பேருக்கு கொரோனா உறுதியானது. தற்போதைய நிலையில் 1,25,230 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,49,292 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 19,112 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,09,450 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 144 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில், 58 பேர் தனியார் மருத்துவமனையிலும், 86 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். கொரோனாவால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,612 ஆக அதிகரித்துள்ளது.

Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு