இ - பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு 1100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்

 


தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவல் அதிகரித்துவருவதைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்து, நடைமுறையில் உள்ளது.

மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் கட்டாயம் இ-பதிவு செய்ய வேண்டும் எனவும் அரசு அறிவித்தது. இ-பதிவு குறித்த சந்தேகங்களுக்கு பொதுமக்கள் விளக்கம் பெறும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொது முடக்கக் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதைத் தடுக்க இ-பதிவு முறை கொண்டுவரப்பட்டது. அவசியத் தேவைகளுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் நிலையில், அதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்த 1100 கட்டணமில்லா தொலைபேசி எண் (1100 ) தொடர்புகொள்ளலாம். காலை 10 முதல் மாலை 6 மணி வரை இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களின் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)