அமெரிக்காவில் வீசிய திடீர் புயல்..

 


அமெரிக்காவின் தென் பகுதி மாகாணங்களில் நேற்று முன் தினம் அதிகாலை திடீரென கடும் புயல் தாக்கியது. இதில், லூயிஸியானா மாகாணத்தைச் சோந்த 2 பேர் உயிரிழந்தனர்.

மிஸிஸிப்பி மாகாணத்தில் புயல் சீற்றம் காரணமாக ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. சாலைகளில் போக்குவரத்து தடைபட்டதுடன் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்புக்குள்ளானது.

புளோரிடா மாகாணத்தில் கடும் புயல் சீற்றத்துக்கு ஏராளமான கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

புளோரிடாவின் பென்சகோலா நகரில் பெரும்பாலான வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளன. எனினும், இது புயலால் ஏற்பட்டது என்பதை தேசிய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், அப்பகுதியில் மணிக்கு 60 மைல் வேகத்தில் காற்று வீசியதாக அது தெரிவித்துள்ளது. 

மேலும், பென்சகோலா செய்தி நிறுவனம் 13 செ.மீ. அளவுக்கு மழைப் பொழிவு ஏற்பட்டதாக கூறியுள்ளது. சேத விவரங்கள் மதிப்பிடப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)