குடும்ப வன்முறை என்றால் என்ன? ஆண், பெண் இருவர் மீதும் சட்டம் பாயுமா?

 


உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும்தான் குடும்ப வன்முறை. கன்னத்தில் அறைவது, அடிப்பது, உதைப்பது, தள்ளுவது, பொருளால் தாக்குவது போன்றவை இதில் அடங்கும். இது, கணவனால் மட்டுமே பெண்களுக்கு வன்முறை நடப்பது என்றில்லை. மற்ற உறவினர்களாலும் நடக்கலாம்.

இந்தியாவில் குடும்ப வன்முறை வழக்குகளை பதிவு செய்வதற்கான செயல்முறை என்ன?

பாதிக்கப்பட்ட பெண்மணி அருகிலுள்ள மகிலா நீதிமன்றத்திலோ I வகுப்பு மாஜிஸ்திரேட்டிடமோ இது பற்றி புகார் அளிக்க வேண்டும். இது போன்ற வழக்குகளுக்கு சிவில் அல்லது கிரிமினல் நீதிமன்றங்களிலும் தீர்வு காண முடியும்.

சம்பவ அறிக்கை (Incident Report) என்றால் என்ன?

குடும்ப வன்முறை தொடர்பான புகார், ஆணையத்திற்கு கிடைத்தவுடன் பாதுகாப்பு அதிகாரி புகாரை விசாரிப்பார். புகார்தாரரால் கூறப்படும் குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரித்த பின்னர் பாதுகாப்பு அதிகாரியால் தயாரிக்கப்படும் அறிக்கையே சம்பவ அறிக்கை (Incident Report) எனப்படுகிறது.

பெண்கள் மீதும் இந்தச் சட்டம் பாயுமா?

குடும்ப வன்முறை புகார் என்றால் அது ஆண்கள் மீதுதான் பாய வேண்டும் என்று அவசியமில்லை. பெண்கள் மீதும் பாயும். சில வருடங்களுக்கு முன்பு மும்பை உயர் நீதிமன்றம் இதை உறுதி செய்திருக்கிறது. ‘பெண்களுக்கான நீதியை உறுதி செய்யும் விதமாகவே இச்சட்டத்தைப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தருவதாக இருந்தால் சட்டமே பொருளற்றுப் போய்விடும். வன்முறைக்கு ஆளான பெண், அதைத் தொடுத்த ஆண்களுக்கு எதிராக புகார் தருவது போலவே ஆண்களும் பெண்களுக்கு எதிராக புகார் செய்யலாம்’ என ஒரு மனுவை விசாரித்த நீதிபதி தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் யாவை?

குடும்ப வன்முறைச் சட்டம் 2005 மற்றும் பிரிவு 498A ஆகியவற்றிலிருந்து பெண்களைப் பாதுகாக்க முடியும். IPCயின் 406, 323, மற்றும் 354 போன்ற பிற தொடர்புடைய பிரிவுகளும் பெண்களைப் பாதுகாக்கிறது.

குடும்ப வன்முறைச் சட்டத்திலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் நேரடி உறவில் பெண்கள் இருக்கிறார்களா?

ஆம், இருக்கிறார்கள்.

குடும்ப வன்முறை வழக்கை பதிவு செய்ய என்ன சட்ட ஆதாரம் தேவை?

நேரில் கண்ட நபரின் சாட்சியங்கள், ஆவண ஆதாரம், ஆடியோ-வீடியோ போன்ற இரண்டாம் நிலை சான்றுகளும் இதற்கு முக்கிய ஆதாரங்களாகும்.

498Aக்கும் குடும்ப வன்முறை வழக்குக்கும் என்ன வித்தியாசம்?

உடல் மற்றும் மனம் ரீதியாகவோ பாலியல் ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும்தான் குடும்ப வன்முறை என்று முன்னர் நாம் கண்டோம். அதோடு IPCயின் 498A ஆனது திருமணமான பெண்ணிடமோ பெண் வீட்டாரிடமோ வரதட்சணை கேட்டு அவர்களை துன்புறுத்தும் போது குற்றவாளியின் மீது பாயும்.

குடும்ப வன்முறையின்போது இல்லற வாழ்விலிருந்து பெண்ணை அவளின் கணவர் வெளியேற்றுவாரா? அதற்கு வாய்ப்புள்ளதா?

ஆம், இது போன்ற பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. கணவர் தன் மனைவியை வீட்டிலிருந்து வெளியேற்றுவதும் குடும்ப வன்முறை தான்.

குடும்ப வன்முறைக்கு ஒரு மனிதன் ஆளானால் அவர் என்ன செய்ய வேண்டும்?

இதை முதலில் போலீசில் புகார் செய்து MLC போன்ற ஆவண ஆதாரங்களுடன் FIR பதிவு செய்ய முயற்சிக்கவும். மேலும் இதற்கு சிறப்பு சட்டம் எதுவும் தேவையில்லை.

குடும்ப வன்முறைச் சட்டங்களை இந்தியாவில் LGBT சமூகத்திற்குப் பயன்படுத்த முடியுமா?

ஆம், தாராளமாக பயன்படுத்தலாம்.

தமிழகத்தின் நிலைமை என்ன?

2014ம் ஆண்டு குடும்ப வன்முறை குறித்து இந்தியா முழுவதிலும் இருந்து பதிவான புகார்களின் எண்ணிக்கை 4,547. அதில் தமிழகத்தில் மட்டுமே பதிவான புகார்களின் எண்ணிக்கை 3,838. அதாவது, நாட்டில் ஒட்டுமொத்தமாக பதியப்பட்டிருக்கும் புகார்களில் 80%க்கும் மேலாக தமிழகத்தில்தான் பதியப்பட்டிருக்கிறது. இந்த புள்ளி விவரத்தை சொன்னது அல்லது வெளியிட்டது எந்த தன்னார்வ அமைப்பும் அல்ல. இந்த தகவலை உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)